games

img

புதிய பரிணாமம் எடுத்த தோனி - ரசிகர்கள் உற்சாகம் 

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் கேப்டன் தோனி துபாயில் தன்னுடைய பணியைத் தொடங்கியிருக்கிறார்.

ஐசிசி உலகக் கோப்பை டி20 தொடருக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் நேற்று ஒமனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் இந்த தொடரின் சூப்பர் 12 சுற்றுக்கு ஏற்கெனவே நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மற்ற 4 அணிகளைத் தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நேற்று முதல் அக்டோபர் 22 ஆம் தேதி வரை ஒமான், ஷார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. 

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அப்போது இந்திய அணியின் ஆலோசகராக (Mentor) முன்னாள் கேப்டன் தோனி நியமிக்கப்பட்டார். இந்திய கிரிக்கெட் அணிக்கு 2007 ஆம் ஆண்டு தலைமை தாங்கிய தோனி முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை பெற்றுத் தந்தார். எனவே அவரது அனுபவம் இந்திய அணிக்குப் பேருதவியாக இருக்கும் என்பதால் பிசிசிஐ இத்தகைய முடிவு எடுத்துள்ளது. 

டி20 உலகக் கோப்பையின் முதல் பயிற்சி ஆட்டம் இன்று இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்திய அணியினருடன் நேற்று இணைந்த தோனி வீரர்களுக்கு பேட்டிங் ஆலோசனைகளை வழங்கினார். அந்தப் புகைப்படங்களை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. மேலும் "இந்திய அணியின் புதிய பொறுப்புக்கு வரவேற்கிறோம்" எனத் தெரிவித்திருந்தது.

இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் தனது முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தானை வருகிற 24 ஆம் தேதி சந்திக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

;