விளையாட்டு உலகில் முக்கிய தொடர்களில் ஒன்றான கிரிக்கெட் உலகக்கோப்பையின் (50 ஓவர்) 13-ஆவது சீசன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 10 நகரங்களில் நவம்பர் 19 வரை நடைபெறும் இந்த தொடரில் தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், வெள்ளியன்று கர்நாடக தலைநகர் பெங்களூ ரில் 18-ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதுவரை 3 லீக் ஆட்டங் களில் விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி முதல் 2 ஆட்டங்களில் (இலங்கை, நெதர்லாந்து) வெற்றி பெற்று, 3-ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய அணியிடம் வீழ்ந்தது. கடுமையான பார்ம் பிரச்சனையில் சிக்கிய ஆஸ்திரேலிய அணி முதல் 2 ஆட்டங்களில் (இந்தியா, தென் ஆப்பிரிக்கா) படுதோல்வியை சந்தித்து, 3-ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை புரட்டியெடுத்து அதிரடி பார்முக்கு திரும்பியுள்ளது. இதே அதிரடி பார்மை தொட ரவும், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் மேல்நோக்கி முன்னேறும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும், 3-ஆவது வெற்றியை ருசித்து புள்ளிப்பட்டியலில் டாப் 3 இடத்திற்கு முன்னேறும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும் என இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால் பெங்களூரு நகரில் நடைபெறும் ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான்
இடம் : சின்னசாமி மைதானம்,
பெங்களூரு, கர்நாடகா
நேரம் : மதியம் 2:00 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஒடிடி : ஹாட் ஸ்டார் (இலவசம் - ஸ்மார்ட்போன் மட்டும், ஸ்மார்ட் டிவிக்களில் பார்க்க சந்தா கட்டணம்)
மிரட்டும் மழை
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழலும், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் என 3 மாநிலங்களிலும் இரண்டு அடுக்கு கனமழைக்கான அறிகுறி உள்ளது. கேரளாவில் கடந்த ஒருவார காலமாக கனமழை புரட்டியெடுத்து வருகிறது. தமிழ்நாடு, கர்நாடகாவில் காலை முதல் மதியம் 2 மணி வரை லேசான அளவில் வெயிலும், மாலை நேர மேகமூட்டத்துடன் சாரலும், சில நேரங்களில் கனமழையும் பொழிகிறது. தமிழ்நாடு, கர்நாடகாவின் வானிலை கடந்த 6 நாட்களாக கணிக்க முடியாத அளவிற்கு உள்ள நிலையில், பெங்களூரில் வெள்ளியன்று நடைபெறும் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் ஆட்டமும் லேசான அளவில் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.