ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதிய பார்வைக் குறைபாடு உள்ளோருக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டெபன் நீரோ புதிய சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலிய நாட்டின் முக்கிய நகரான பிரிஸ்பேனில் நடைபெற்ற ஆட்டத்தில் தொடக்க வீரர் ஸ்டெபன் நீரோ வின் அபார ஆட்டத்தால் ஆஸ்திரேலியா 40 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 542 ரன்கள் குவித்தது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் நீரோ 309 ரன்கள் (140 பந்து, 49 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசி புதிய சாதனை படைத்துள்ளார். பார்வைக் குறைபாடு உள்ளோருக் கான சர்வதேச ஒருநாள் போட்டியில் முச்சதம் அடித்த முதல் வீரர் என்ற வர லாற்றுச் சாதனையை நீரோ நிகழ்த்தி விளையாட்டு உலகை வாயடைக்க செய்துள்ளார். இந்த ஆட்டத்தில் ஆஸ்தி ரேலியா 270 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.