games

img

கோலியின் தேவையில்லாத செயலால் வெடித்த சர்ச்சை - வங்கதேச வீரர்கள் போர்க்கொடி

வங்கதேச அணிக்கெதிரான “சூப்பர் 12” சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 5 ரன்கள் (மழைகாரணமாக டக்வொர்த் விதிப்படி) வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டம் பிரச்சனை இல்லாமல் நிறைவு பெற்றாலும் இந்திய  வீரர் விராட் கோலியின் பேக் பீல்டிங் (FAKE  FIELDING) மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. 7-வது ஓவரில் லிட்டன் தாஸ் அடித்த ஷாட்டை பீல்டிங் செய்த அர்ஷ்தீப் சிங் பிட்ச் லைன்  நோக்கி எறிந்தார். பந்து கீப்பர் நோக்கிதான் சென்றது. ஆனால் நடுவில் இருந்த கோலி  தன்னிடம்  பந்து  உள்ளது போல பாசாங்கு காட்டி எறிவது போல கையை நீட்டி  ஸ்டைல் கொடுத்தார். கோலியின் இந்த செயல் பேக் பீல்டிங் ஆகும். கிரிக்கெட் விதிமுறைகளின்படி பேக் பீல்டிங்கினால் பேட்டர்களின் கவனம் சிதறினால் அதற்கு 5 ரன்கள் அபராதம் விதிக்க வேண்டும். ஆனால் இந்தச் சம்பவத்தில் கோலியின் செயலை பேட்டர்கள் சரியாக கவனித்தது போலத் தெரிய வில்லை என்பதால் நடுவர்கள் கண்டு கொள்ளவில்லை. ஆனால் மழை காரணமாக 5  ரன்கள் வித்தியாசத்தில் நாங்கள் தோற்று விட்டோமே என்ற எண்ணத்தில் கோலியின் பேக் பீல்டிங் செயலை கெட்டியாக பிடித்துக் கொண்டு அதற்கு நியாயம்  கேட்க ஆரம்பித்துள் ளது வங்கதேசம். கோலியின் பேக்  பீல்டிங்கினால் நடவடிக்கை எடுத்து 5 ரன்கள் அபராதம் விதித்திருந்தால் நாங்கள் ஜெயித்திருப் போம் என வங்கதேச வீரர் நுருல் ஹாசன் கூறியுள்ளதால் கிரிக்கெட் உலகில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புரியாத சர்ச்சை கருத்து?

“மழைக்கு பிறகு மைதானம் எந்தளவுக்கு ஈரமாக இருந்தது என்பது நடுவர்களுக்கு நன்றாக தெரியும். அதிக ஈரப்பதத்தால் பந்து சரியாக நகரவில்லை. எங்கள் அணியின் பேட்டர்கள் சரியாக ஓட முடியவில்லை.  20 நிமிடங்கள் தாமதமாக ஆட்டத்தை துவங்கி இருக்கலாம்” என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் வங்கதேச கேப்டன் சாகிப் அல் ஹாசன். சாகிப் கூறிய குற்றச்சாட்டில் பந்து நகரவில்லை, ஈரப்பதம் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் பேட்டர்கள் ஓட முடியவில்லை என்று கூறுவது தவறானது. மழை பெய்யும் பொழுது பிட்ச் பகுதி மற்றும் அருகில் 10மீ (தோராயமாக) பகுதியை முழுவதும் மூடி விடுவார்கள். இதனால் பிட்ச் பகுதியில் ஓடுவது பிரச்சனை இல்லை. மற்றொன்று 20 நிமிடம் தாமதமாக ஆரம்பிக்கலாம் எனக் கூறுவது விதிகளில் டி-20 போட்டிகளுக்கு ஒத்து வராது. இரவு நேர போட்டி மற்றும் குறுகிய கால ஓவர் உடையது என்பதால் மழை நின்றபின் போட்டியை துவக்குவது தான் இதுவரை உள்ள நடைமுறையாகும். இவ்வளவு விதிகள் இருந்தும் சாகிப் கூறிய கருத்துக்கள் புரியாத  சர்ச்சை  கருத்துக்களாக உள்ளது.

இன்றைய  ஆட்டங்கள்

நியூசிலாந்து-அயர்லாந்து
நேரம் : காலை 9:30 மணி

ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான்
நேரம் : மதியம் 1:30 

இரண்டு ஆட்டங்களும் : அடிலெய்டு ஓவல்

மழை வருமா?

வெள்ளியன்று நிலவரப்படி அடிலெய்டு நகர வானிலை மந்தமாக இருக்கும். பெரியளவு மழைக்கு வாய்ப்பில்லை என்றாலும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்பதால் மாலை நேரங்களில் லேசான சாரலுக்கு வாய்ப்புள்ளது.

ஆசிய செஸ் தமிழ்நாடு வீரருக்கு தங்கம்
 

தில்லியில் நடைபெற்று வரும் ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு பிரக்ஞானந்தா 9 சுற்றுகள் கொண்ட தொடரில் 7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். மகளிர் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நந்திதா 7.5 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இருவரும் உலகக் கோப்பை போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.