games

img

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி.... 

கொல்கத்தா:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவருமான சவுரவ் கங்குலி (48)  கடந்த 2-ஆம் தேதி நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள வுட்லாண்ட்ஸ் (woodlands) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாயில் 3 அடைப்புகள் இருப்பதாகத் தெரிவித்து ஆஞ்சியோ அளிக்கப்பட்டு அடுத்த சில நாட்களில் வீடு திரும்பினார்.  

இந்நிலையில், இன்று மீண்டும் கங்குலிக்கு நெஞ்சுவலி காரணமாக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடலில் மீண்டும் என்ன பிரச்சனை என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் கங்குலியின் உயிருக்கு ஆபத்தில்லை, இன்னும் சில மணி நேரத்தில் வீடு திரும்புவார் என வுட்லாண்ட்ஸ் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிரடிக்கு பெயர் பெற்ற கங்குலிக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி பாஜகவின் அரசியல் வேலையாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. தமிழகத்தில் ரஜினியை இழுக்க முயற்சி செய்தது போல கொல்கத்தாவில் கங்குலியை அரசியல் இழுக்கும் முயற்சியில் பாஜக களமிறங்கியுள்ளது. 

கங்குலியை அரசியலுக்கு வரச்சொல்லி பாஜக அளித்த அழுத்தமே அவரது லேசான மாரடைப்புக்கு காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், கங்குலியின் நெருங்கிய நண்பருமான அசோக் பட்டாச்சார்யா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

;