அர்ஜெண்டினா- பிரேசில் ரசிகர்கள் மோதல் விவகாரம்
சிறிய பிரச்சனையை பெரிதாக்கிய பிரேசில் போலீசார்
வலுக்கும் கண்டனம்
கிரிக்கெட் உலகில் இந்தியா - பாகிஸ்தான் எலியும், பூனையு மாக இருப்பது போல கால்பந்து உலகில் பிரேசில் - அர்ஜெண்டினா அணிகளுக்கு ஆகவே ஆகாது. உலகக்கோப்பை, கோபா அமெரிக்கா, தகுதி சுற்று ஆட்டங்கள் என எந்த ஆட்டமாக இருந்தாலும் சரி பிரேசில் - அர்ஜெண்டினா வீரர்கள் அதிரடி ஆட்டத்துடன் மோதிக் கொள்வார்கள். சண்டை சச்சரவு இல்லாமல் பிரேசில் - அர்ஜெண்டினா அணிகளின் ஆட்டங்கள் நடைபெற்றதாக வரலாறு இல்லை. வீரர்களை விட இருநாட்டு ரசிகர்கள் மைதான பெவிலி யன்களில், நகர தெருக்களில் கூட மோதிக்கொள்வார்கள். கால்பந்து உலகில் அர்ஜெண்டினா - பிரேசில் நிலைமை இதுதான். இது அடிக்கடி நிகழ்வதால் சர்வசாதாரணமாக கருதப்படுகிறது.
கொலைவெறித் தாக்குதல்
இப்படி ஒரு நீண்ட வரலாறு இருக்கையில் செவ்வா யன்று நள்ளிரவு (பிரேசில் நேரப்படி) அர்ஜெண்டினா - பிரேசில் அணிகள் (தென் அமெரிக்கா யூனிட்) உலகக்கோப்பை க்கான தகுதிச் சுற்று ஆட்டங்களில் பங்கேற்றன. பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற இந்த ஆட்டம் துவங்கும் நேரத்தில் பிரேசில் - அர்ஜெண்டினா ரசிகர்களுக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இது சாதாரண தள்ளுமுள்ளு போன்றது. ஆனால் மோதலை தடுப்பதாக கூறி பிரேசில் அதிரடி படை போலீசார் அர்ஜெண்டினா ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர். அர்ஜெண்டினா ரசிகர்கள் போலீசாரை தடுக்க முயன்ற பொழுது, பிரேசில் போலீசார் கொலைவெறித் தாக்குதலை தொடங்கினார். இந்த தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட அர்ஜெண்டினா ரசிகர்கள் படுகாயமடைந்தனர்.
மெஸ்ஸி கண்டனம்
தங்கள் நாட்டு ரசிகர்கள் மீதான தாக்குதலை நேரடியாக கண்ட அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்ஸி எங்களால் விளையாட முடியாது என அணி வீரர்களுடன் வெளியேறினார். அதன்பிறகு சமாதான பேச்சுவார்த்தை மூலம் மீண்டும் அர்ஜெண்டினா அணி தொடர்ந்து விளையாடி 1-0 என்ற கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தியது.
பிரேசில் போலீசாருக்கு வலுக்கும் கண்டனம்
விளையாட்டு உலகில் ரசிகர்கள் மோதல் என்பது விளையாட்டுடன் தொடர்புடைய ஒன்றாகும். இதனை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்ற நிலையில், அர்ஜெண்டினா - பிரேசில் ரசிகர்கள் மோதல் விவகாரத்தில் இருநாட்டு ரசிகர்கள் மீது தடியடி நடத்தாமல் ஒருதலைப்பட்சமாக அர்ஜெண்டினா ரசிகர்கள் மீது மட்டுமே கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளது பிரேசில் அதிரடிப்படை. பிரேசில் அரசு இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ள நிலையில், சர்வதேச அளவிலும் கண்ட னங்கள் குவிந்து வருகிறது. சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் கியானி இன்பான்டினோவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இனவெறி மோதலாக மாற வாய்ப்பு?
காலங்காலமாக பிரேசில் - அர்ஜெண்டினா ரசிகர்களுக்கு இடையேயான மோதல் உள்ளூர் பஞ்சாயத்துப் போல இருந்தது. ஆனால் அர்ஜெண்டினா ரசிகர்கள் மீது இரும்பு கம்பியால் பிரேசில் தாக்குதல் நடத்திய விவகாரம் இருநாடு களுக்கு இடையே இனவெறி தாக்குதலாக மாறும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது என விளையாட்டுச் செய்தி நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.