games

img

ஆஷஸ் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

கிரிக்கெட் உலகில் மிக முக்கிய தொடர்களில் ஒன்றான பாரம்பரிய மிக்க ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டிற்கான சீசன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகளையே கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், 3-வது  டெஸ்ட் போட்டி மெல்போர்னில் ஞாயிறன்று தொடங்கியது.  டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 65.1 ஓவர்களில் 185 ரன்களுக்கு சுருண்டது. ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 267 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 82 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி  வழக்கம் போல சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 27.4 ஓவர்களில் 68 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 14 ரன்கள் வித்தியாசத்தில், இன்னிங்ஸ் வெற்றியுடன் 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய போலந்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 4-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 5-ஆம் தேதி சிட்னியில் தொடங்குகிறது.