இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது பார்டர் - கவாஸ்கர் என்ற பெயரில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 ஆட்டங்களில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 3-வது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கியது. ஆஸ்திரேலிய வீரர் குன்னேமான் (5 விக்.,) சுழற்பந்துவீச்சை தாக்குப்பிடிக்கமுடியாமல் முதல் இன்னிங்சில் 109 ரன்களுக்கு சுருண்டது. இந்தியாவை போல அல்லாமல் சற்று நிதான ஆட்டத்துடன் ரன் குவித்த ஆஸ்திரேலிய அணி, காவஜாவின் (60) அரைசத உதவியால் முதல் இன்னிங்சில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 4 விக்., வீழ்த்தினார். 88 ரன்கள் பின்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி மீண்டும் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை ஆஸ்திரேலிய வீரர் குன்னேமான் மிரட்டிய நிலை யில், 2-வது இன்னிங்சில் லியோன் ரிவர்ஸ் சுழற்பந்துவீச்சை இந்திய அணியின் மிடில் ஆர்டரை சின்னாபின்னமாக்கினார். புஜாரா மட்டும் ஓரளவு திடமாக விளையாடி அரைசதமடித்த நிலையில், மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 60.3 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆட்டம் இழந்து, ஆஸ்திரேலிய அணியின் வெற்றி இலக்காக 75 ரன்கள் நிர்ணயம் செய்துள்ளது இந்தியா. இன்னும் மூன்று நாட்கள், 10 விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி 3ஆவது டெஸ்ட் போட்டியில் மிக எளிதாக வெற்றியை ருசிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷமிக்கு ஓய்வு ஏன்?
3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் பல்வேறு மாற்றம் செய்யப்பட்டது. தொடக்க வீரரும், துணை கேப்டனுமான கே.எல்.ராகு லும், வேகப் பந்துவீச்சாளர் ஷமி ஆகியோர் நீக்கப்பட்டு, ராகுலுக்கு பதிலாக சப்மன் கில்லும், ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவும் சேர்க்கப்பட்ட னர். பார்ம் பிரச்சனையால் கே.எல்.ராகுல் நீக்கப்பட்டது சரியானது என்றாலும், சூப்பர் பார்மில் முதல் 2 போட்டி களில் வெற்றியை தேடித்தந்த ஷமியை நீக்கியது பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
500 - 5000
முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டை வீழ்த்திய பொழுது சர்வதேச போட்டியில் 500 விக்கெட் வீழ்த்தி, 5,000 ரன்களை எடுத்த 2-வது வீரர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றுள்ளார். முதல் வீரராக முன்னாள் கேப்டன் கபில்தேவ் உள்ளார். கபில்தேவ் 131 டெஸ்ட் போட்டிகளில் 5,248 ரன்கள், 434 விக்கெட்டுகளையும், 225 ஒருநாள் போட்டிகளில் 3,783 ரன்கள், 253 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜடேஜா 63 டெஸ்டில் 263 விக்கெட்டும், 2,619 ரன்களும், 171 ஒரு நாள் போட்டியில் 189 விக்கெட்டும்,2,447 ரன்களும், 64 டி-20 ஆட்டத்தில் 51 விக்கெட்டும், 457 ரன்களும் எடுத்துள்ளார்.
வியூகத்தில் கலக்கிய ஸ்மித்
தற்காலிக கேப்டனாக 3-வது டெஸ்ட் போட்டியை கவனித்து வரும் ஆஸ்திரேலிய அணியின் மூத்த வீரர் ஸ்மித் முதல் இன்னிங்சின் தொடக்கத்தில் வழக்கம் போல வேகப்பந்து வீச்சை பயன்படுத்தி பார்த்தார். இந்திய வீரர்கள் லேசாக ரன் குவிக்க, குன்னே மான் - லியோன் - முர்பி சுழற்பந்து கூட்டணியை களமிறக்கி, இந்திய அணியின் மிடில் ஆர்டரை சின்னாபின்னமாக்கினார். இந்த வியூகம் கைகொடுக்க 2-வது இன்னிங்ஸிலும் அதே பணியை கையிலெடுத்து இந்திய அணியை திணற வைத்துள்ளார் ஸ்மித். மேலும் பீல்டிங், பந்துவீச்சு என அனைத்திற்கும் தனித்தனி வியூகம் அமைத்து, 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பலமான அணியாக சிங்க நடையுடன் வலம் வரும் இந்திய அணியை ஒரே நாளில் விழிபிதுங்க வைத்துள்ளார் கேப்டன் ஸ்மித்.
டபிள்யூபிஎல் கேப்டன்களின் பட்டியல்
ஆடவருக்கு நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப் போன்று மகளிருக்கு நடப்பாண்டு முதல் டபிள்யூபிஎல் என்ற பெயரில் டி-20 லீக் மார்ச் 4 முதல் 26 வரை மும்பையில் உள்ள இரு மைதானங்களில் நடைபெறவுள்ளது. அகமதாபாத், மும்பை, பெங்களூரு, தில்லி, லக்னோ ஆகிய 5 நகரங்களின் பெயரில் அணிகள் களமிறங்கும் நிலையில், 30 வெளிநாட்டு வீராங்கனைகள் உள்பட மொத்தமாக 87 பேர் ஏலத்தில் தேர்வாகி களம் காண காத்திருக்கின்றனர். இந்நிலையில், டபிள்யூபிஎல் தொடருக்கான கேப்டன் பட்டியல் வெளியாகியுள்ளது. மொத்தமுள்ள 5 அணி கேப்டன்களில் 2 பேர் மட்டுமே இந்திய வீராங்கனைகள். மற்ற 3 அணிகளின் கேப்டன்கள் ஆஸ்திரேலியா வீராங்கனைகள் ஆவர்.
கேப்டன் பட்டியல்
மும்பை - ஹர்மன்ப்ரீத் கவுர் (இந்தியா)
பெங்களூரு - ஸ்மிருதி மந்தனா (இந்தியா)
லக்னோ - அலிஸா ஹீலி (ஆஸ்திரேலியா)
அகமதாபாத் - பெத் மூனே (ஆஸ்திரேலியா)
தில்லி - மெக் லேனிங் (ஆஸ்திரேலியா)