ஹனுமா விஹாரிக்கு ஆந்திர வீரர்கள் ஆதரவு
மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்
இந்திய அணியின் நட்சத்திர டெஸ்ட் வீரர் ஹனுமா விஹாரி தலைமையில் ஆந்திர கிரிக்கெட் அணி ரஞ்சிக் கோப்பையில் களமிறங்கியது. பெங்கால் அணிக்கெதிரான முதல் ஆட்டத்தில் 17ஆவது வீரரான பிருத்வி ராஜை போட்டி தொடர்பாக சத்தம் போட்டு அழைத்துள்ளார் ஹனுமா விஹாரி.
கிரிக்கெட் மட்டுமின்றி எந்தவொரு விளையாட்டாக இருந்தாலும், கேப்டன் சொல்லும் வேலைகளை மதித்து நடக்க வேண்டும். அதற்கு தான் கேப்டன் பத வியே உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் பிருத்விராஜ் இந்த விவ காரத்தை தந்தையிடம் கூற, அரசியல் வாதியான அவரது தந்தை ஆந்திர கிரிக்கெட் சங்கத்திடம் முறையிட்டுள் ளார். ஆந்திர கிரிக்கெட் சங்கம் ஹனுமா விஹாரியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது. இதனால் ஆந்திர அணி ரிக்கி புய் தலைமையில் கள மிறங்கியது.
ரஞ்சிக் கோப்பை தொடரின் காலி றுதி ஆட்டத்தில் ஆந்திர அணி வெளி யேறிய பின்னர், இனிமேல் ஆந்திர அணிக்காக விளையாட மாட்டேன் எனக் கூறி பிருத்விராஜின் தந்தை மூலம் ஆந்திர கிரிக்கெட் சங்கத்தில் அரசியல் தலையீட்டை ஹனுமா விஹாரி பிருத்வி ராஜ் விவகாரத்தை போட்டுடைத்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், ஹனுமா விஹாரி மீது வீரர்கள் பல்வேறு குற்றச்சாட்டு கூறியதன் காரணமாகவே அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கினோம் என ஆந்திர கிரிக்கெட் சங்கம் விளக்கம் அளித்தது.
இந்நிலையில், கிரிக்கெட் சங்கத்தின் விளக்கத்தை ஏற்க மறுத்த ஹனுமா ஆந்திர வீரர்கள்,”விஹாரி மிகச்சிறந்த கேப்டன். அவர் தவறா னவர் அல்ல. விஹாரி மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானது” என ஆந்திர வீரர்கள் அனைவரும் கை யெழுத்திட்டு அம்மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனர். கடிதத்தை பெற்றுக்கொண்ட ஆந்திர கிரிக்கெட் சங்க தலைமை அதி காரி, கடிதத்தை இந்திய கிரிக்கெட் கட்டு ப்பாட்டு வாரியத்திற்கு அனுப்பப்படும் என உறுதி அளித்துள்ளார்.
புரோ கபடி 2024
ஒரே சீசனில் 885 புள்ளிகளை குவித்த புனே
10-ஆவது சீசன் புரோ கபடி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மார்ச் 1-ஆம் தேதி இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.
இளம் வீரர்களின் பயமில்லா அதிரடி ஆட்டத்தால் நடப்பு சீசன் கபடி தொட ரில் பல்வேறு சாதனைகள் அரங்கேறி யுள்ளது. இந்திய கபடி உலகம் பெரி யளவு அறிந்திறாத இளம் வீரர் அசு மாலிக் (தில்லி) ஒரே சீசனில் 280 புள்ளி களை குவித்த நிலையில், புனே அணி ஒரே சீசனில் 885 புள்ளிகளை குவித்து அசத்தியுள்ளது.
இதேபோல மற்ற பிரிவுகளில் அணிகள் மற்றும் வீரர்களின் சாதனை அம்சங்களை காணலாம் :
புனே - 885
வலுவான அதிரடி ஆட்டத்திறன் கொண்ட புனே அணி நடப்பு சீசனில் 22 ஆட்டங்களில் கலந்துகொண்டு 885 புள்ளிகளை குவித்து முதலிடத்தில் உள்ளது.
அசு மாலிக் - 885
இந்திய கபடி உலகம் பெரியளவு அறிந்திறாத இளம் வீரர் அசு மாலிக் (தில்லி) ஒரே சீசனில் 280 புள்ளிகளை குவித்து அசத்தியுள்ளார். அர்ஜுன் தேஷ்வால் (264 - ஜெய்ப்பூர்) 2-ஆவது இடத்திலும், பவன் செராவத் ( 217 - தெலுங்கு டைட்டன்ஸ்) 3-ஆவது இடத்திலும், மணிந்தர் சிங் (198 - பெங்கால்) 4-ஆவது இடத்திலும், தமிழ்நாடு வீரர் நரேந்தர் 195 புள்ளிகளு டன் 5-ஆவது இடத்திலும் உள்ளனர்.
ஹரியானா - 1004
தாக்குதல் பாணி ஆட்டத்திறனை கொண்ட ஹரியானா அணி நடப்பு சீசனில் மொத்தமாக 23 ஆட்டங்களில் 1004 ரெய்டுகள் சென்றுள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் (1002), பாட்னா (1001)ஆகிய அணிகளும் 1004 ரெய்டுகள் சென்றுள்ளன.
அசு மாலிக் - 228
வெற்றி ரெய்டுகளில் தில்லி வீரர் அசு மாலிக் (தில்லி - 228) முதலிடத்தில் உள்ளார். ஜெய்ப்பூர் வீரர் அர்ஜுன் தேஸ்வால் (200) 2-ஆம் இடத்திலும், தெலுங்கு டைட்டன்ஸ் வீரர் பவன் செராவத் 156 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்திலும் உள்ளனர்.
(குறிப்பு : மேற்குறிப்பிட்ட சாதனை அம்சங்கள் அரையிறுதி ஆட்டத்திற்கு முன்பு தயாரான தொகுப்பு ஆகும்)