10 அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு காத்திருக்கும் அபாயம்
10-க்கு மேல் 4...10-இல் 4... 8-இல் 2... குழப்பத்தில் நகரும் ஐபிஎல்
முன்னெப்போதும் இல்லாத வகையில் நடப்பு சீசன் ஐபிஎல் மிகுந்த சுவாரஸ்யமாக நடைபெற்று வருகிறது. காரணம் புள்ளிப்பட்டியலில் 10 அணிகளும் பிளே ஆப் சுற்று கனவு ரேஸில் இருப்பதுதான். முதல் இடத்தில் உள்ள குஜராத் (16) அணி மட்டும் பிளே ஆப்பிற்கான வாய்ப்பில் நல்ல நிலையில் உள்ளது. சூப்பர் பார்மில் உள்ள சென்னை (13) இனி வரும் ஆட்டங்களில் ஒன்றிரண்டு வெற்றிகளை குவித்தால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறலாம். ஆனால் 3-வது இடத்தில் இருக்கும் மும்பை (12), 4-வது லக்னோ (11) ஆகிய அணிகள் பிளே ஆப் கட் ஆப்பில் (முதல் 4 இடம்) கம்பீரமாக நின்றாலும், அதற்கு கீழே ராஜஸ்தான் (10), கொல்கத்தா (10),பெங்களூரு (10), பஞ்சாப் (10) ஆகிய அணிகள் இருப்பதால் அந்த அணிகளின் பிளே ஆப் சுற்றுக்கு சற்று சிக்கல் உள்ளது. 5 முதல் 8 இடங்களில் உள்ள அணிகளில் 2 அணிகள் தொடர்ந்து 2 வெற்றிகளை ருசித்தாலே மும்பை, லக்னோ அணியின் பிளே ஆப் வாய்ப்பிற்கு குடைச்சல் ஏற்படும். அதே போல மும்பை, லக்னோ அணிகள் வெற்றியை ருசித்தால் சென்னை அணியின் புள்ளிப்பட்டியலின் தற்போதைய இடத்தில் (2) இருந்து இறங்கும் நிலை ஏற்படும். கடைசி 2 இடங்களில் ஹைதராபாத் (8), தில்லி (8) ஆகிய அணிகள் உள்ளன. இந்த அணிகள் இனிவரும் ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் தொடர் வெற்றியை ருசித்து, புள்ளிப்பட்டியலில் மேலே உள்ள அணிகளின் வெற்றி, தோல்வி கணக்கீட்டில் அதிசயம் நிகழ்ந்தால் ஹைதராபாத், தில்லி அணிகளுக்கும் பிளே ஆப் வாய்ப்பு நனவாகும். (புள்ளிப்பட்டியல் : மாலை 5 மணி நிலவரம்)
ஆஸ்கர் நட்சத்திரங்கள் பொம்மன், பெள்ளியுடன் தோனி
ஜெர்சி பரிசாக வழங்கினார்
சிறந்த ஆவண குறும்படத் திற்கான ஆஸ்கர் விருதை வென்ற “தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்” படத்தில் நடித்த பொம்மன் - பெள்ளி ஆகியோரை இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஐபிஎல் சென்னை அணியின் கேப்டனுமான தோனி நேரில் சந்தித்து, அவர்களை கவுரவப்படுத்தும் விதமாக சென்னை அணியின் ஜெர்சி யை வழங்கினார். மேலும் ஆவண குறும்படத்தின் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வஸுக்கும் ஜெர்சி வழங்கி பாராட்டினார். ஜெர்சியில் அனை வருக்கும் அவரவர் பெயரில், தோனி யின் ஜெர்சி எண் 7 பொறிக்கப்பட்டு வழங்கப்பட்டது.
40 ஓவர்களிலும் ஆலோசனை மழை கலக்கும் குஜராத் பயிற்சியாளர் நெக்ரா
நடப்பு சாம்பியன் குஜராத் அணி, கடந்த சீசனை போலவே அபார மான ஆட்டத்தை வெளிப்படுத்தி 8 ஆட்ட ங்களில் வெற்றியை குவித்து முத லிடத்தில் கம்பீரமாக உள்ளது. குஜராத் அணியின் இந்த அசத்தல் செயல்பாட்டி ற்கு வீரர்கள் ஒரு காரணம் என்றா லும், முக்கிய காரணமாக இருப்பவர் குஜராத் தலைமை பயிற்சியாளர் நெக்ரா ஆவார். மற்ற பயிற்சியா ளர்களை போல் அல்லாமல், இடத்தில் அமராமல் 40 ஓவர்களும் பவுண்டரி எல்லையில் நின்று அணி வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்குகிறார். குஜராத் அணி பந்துவீசினால் நேரடி யாக ஒவ்வொரு வீரருக்கும் ஆலோச னைகளும், தூது ஆலோசனைகளும், குஜராத் அணி பேட்டிங் செய்தால் சர்வீஸ் வீரர்கள் (தண்ணீர் பாய்ஸ்) மூலமும், சைகை மூலமும் ஆலோச னை வழங்கி கலக்குகிறார். அனைத்து வீரர்களிடம் வெளிப்படையாக சுதந்திர மாக பேசும் பண்பு இருப்பதால் குஜராத் அணி வீரர்கள் அழுத்தம் இல்லாமல் விளையாடி வருகின்றனர். நெக்ராவை பயிற்சியாளராக நியமித்தால் இந்திய அணியின் எதிர்காலம் அருமையாக இருக்கும்.
இன்றைய ஆட்டம்
கொல்கத்தா - ராஜஸ்தான்
இடம் : ஈடன் கார்டன் மைதானம், கொல்கத்தா
நேரம் : இரவு 7:30 மணி
(சேனல் : தொலைக்காட்சி - ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஒடிடி - ஜியோ சினிமா)