games

img

விளையாட்டு...

போட்டியின் போது மாரடைப்பு மைதானத்திலேயே உயிரிழந்த கிரிக்கெட் வீரர்

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள கார்வேர் மைதானத்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டி யின் பொழுது இம்ரான் படேலுக்கு  (35) பேட்டிங் செய்து கொண்டிருக்கும்  போது நெஞ்சுவலி ஏற்பட்டது. இம்ரான் நடுவரிடம் கூறி பெவிலிய னுக்குச் சென்றுள்ளார். ஆனால் பவுண்டரி எல்லை அருகே செல்லும்  போதே இம்ரான் படேல் சுருண்டு  விழுந்தார். உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் இம்ரான் படேல் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரி வித்துள்ளனர். திடீர் மாரடைப்பு போட்டி தொடங்கும் பொழுது இம்ரான் நல்ல நிலையில் தான் கள மிறங்கினார். அதே போல பெரும் பாலும் கிரிக்கெட் தொடர்களில் நல்ல உடல் தகுதியுடனும் அவர் விளை யாடி வந்தார். இம்ரான் ஒரு நல்ல ஆல்ரவுண்டராக இருப்பதால் ஒரு போட்டி முழுவதும் சுறுசுறுப்பாக  இருக்கக் கூடியவர். ஆனால் அவ ருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது விளையாட்டு உலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இம்ரானுக்கு ஒரு மனைவி மற்றும்  மூன்று மகள்கள் உள்ளனர். அவரு டைய இளைய மகள் பிறந்து 4 மாதங் கள் தான் ஆகிறது. இம்ரான் புனே நக ரத்தில் உள்ள ஒரு கிரிக்கெட் அணிக்கு சொந்தக்காரராகவும், ரியல் எஸ்டேட், ஜூஸ் கடை வியா பாரம் செய்து வருகிறார் என்பது குறிப் பிடத்தக்கது. 2ஆவது சம்பவம் கடந்த செப்டம்பர் மாதம் இதே புனே நகரில் ஹபீப் ஷேக் என்ற மற்றொரு கிரிக்கெட் வீரரும் மார டைப்பால் உயிரிழந்தார். ஹபீப் ஷேக்  ஒரு நீரிழிவு நோயாளி. அதனால் அவரது மரணம் பெரியளவு சர்ச்சையை  ஏற்படுத்தவில்லை. ஆனால் ஆரோக்கி யமான நிலையில் இருந்த இம்ரான் உயிரிழப்பே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“ரிவர்ஸ் ஸ்வீப்” ஷாட் தான் காரணமா?

இம்ரான் படேல் தான் விளை யாடிய கடைசி பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்  விளாசினார். அதன்பிறகு தான் அவ ருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. ரிவர்ஸ்  ஸ்வீப் ஷாட் என்பது 45 டிகிரி அளவில்  குனிந்து பந்தை திருப்ப  வேண்டும். ஆனால் அவ்வளவு கடினமான ஷாட்  இல்லை என்றாலும், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் காரணமாகவே இம்ரான் படேலுக்கு  மார்பு அழுத்தம் ஏற்பட்டிருக்கலாம். இது மாரடைப்புக்கு வழிவகுத்து இருக்கும் என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.

புரோ கபடி 2024

இன்றைய ஆட்டங்கள்

இரண்டு ஆட்டங்களும்:  நொய்டா மைதானம், உத்தரப்பிரதேசம். சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஓடிடி)

சித்தார்த் கவுல் ஓய்வு பெற்றார்

இந்திய வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவ தாக வெள்ளிக்கிழமை அறிவித்தார். விராட் கோலி தலைமையிலான  (2008) 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த சித்தார்த் கவுல், அந்த தொடரில் 10 விக்கெட் வீழ்த்தி இந்திய அணி  உலகக் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இதன்மூலம் ஐபிஎல் (பெங்களூரு,  ஹைதராபாத்) மற்றும் இந்திய தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். எனினும்  பார்ம் பிரச்சனை காரணமாக சர்வதேச அரங்கில் சித்தார்த் கவுல் பெரியளவில் சாதிக்கவில்லை.