games

img

இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: 100 சதவீத ரசிகர்கள் அனுமதி  

இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையேயான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 100% ரசிகர்கள் அனுமதிக்கப்படுவதாக கர்நாடக கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 100 சதவீத ரசிகர்கள் வருகை அனுமதிக்கப்படும் என கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.  

இதுகுறித்து கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், பெங்களூரில் நாளை முதல் (மார்ச் 12) இளஞ்சிவப்பு பந்தைக்கொண்டு விளையாடும் பகல்-இரவு ஆட்டமாக 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் நடைபெறுகிறது. முன்னதாக பெங்களூரு மைதானத்துக்கு 50% ரசிகர்களே அனுமதிக்கப்பட்டார்கள். அதனைதொடர்ந்து இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் தற்போது 100% ரசிகர்களுக்கு அனுமதி வழங்குவதாக கர்நாடக கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

டெஸ்டுக்கான ஒருநாள் டிக்கெட்டுக்கு ரூ. 100 முதல் ரூ. 1250 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மேலும் கூடுதல் டிக்கெட்டுகளை இன்று முதல் விற்பனை செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நடைபெறும் 3ஆவது பகலிரவு டெஸ்ட் இது என்பது குறிப்பிடத்தக்கது.