games

img

உலகக்கோப்பை கால்பந்து 2022

22-வது  சீசன் உலகக்கோப்பை தொடங்க இன்னும் 11 நாட் களே உள்ள நிலையில், இந்தியா வில் கால்பந்துக்கென கிளைமேக்ஸ்  உள்ள இடமான கேரளாவில் “கட்  அவுட்” காய்ச்சல் தொடங்கியுள் ளது. வழக்கமாக சின்ன சின்ன வேலை களில் ஈடுபடும் மலையாள கால்பந்து ரசிகர்கள் இம்முறை ஆற்றின் நடுவில்  கட் அவுட்களை வைத்து கால்பந்து உலகை இந்தியா பக்கம் திரும்பி  பார்க்க வைத்துள்ளனர். அதுவும் சில இடங்களில் கட் அவுட் வைக்க மோத லும் ஏற்பட்டுள்ளது. மோதலுக்கு கார ணம் அர்ஜெண்டினா, பிரேசில், போர்ச்சுக்கல் ஆகிய மூன்று அணி களால் கேரள ரசிகர்கள் பிரிந்துள்ளது  தான். அர்ஜெண்டினா கோஷ்டி மெஸ் ஸியின் கட்அவுட்டை வைக்கவும், பிரேசில் கோஷ்டி நெய்மாரின் கட் அவுட்டை வைக்கவும், போர்ச்சுக்கல் கோஷ்டி ரொனால்டோவின் கட்அவுட் டை வைக்கவும், முட்டி மோதி வரு கின்றனர். இவர்களின் கட் அவுட் சேட்டையால் கேரள ஆறுகள் படாத பாடுபடுகிறது. ரசிகர்கள் இப்படி  என்றால் அங்குள்ள இடதுசாரி, காங்கிரஸ் அரசியல் தலைவர்கள், எம்எல்ஏ-க்களும் தங்களுக்குள் விளையாட்டு உணர்வு மோதலுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மாநிலக் கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி பிரேசிலுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் போஸ்ட ரை பதிவிட அரசியலுக்குள்ளும் கால்பந்து சண்டை தொடங்கியது. மூத்த இடதுசாரி தலைவரும், முன் னாள் மாநில அமைச்சருமான எம்.எம்.மணி (அர்ஜெண்டினா ரசிகர்) கத்தாரில் இருந்து வரும் முதல் விமா னத்தை பிரேசில் பிடிக்காமல் செல் லாது என கிண்டலாக கூறினார். எம்எல்ஏக்கள் பி.மம்மிகுட்டி, எம். விஜின், எம்.நௌஷாத், வி.கே.பிர சாந்த், இ.பி.ஜெயராஜன் உள்ளிட் டோர் அர்ஜெண்டினாவுக்கு ஆதரவு  தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளனர். கே.எம்.சச்சிந்தேவ், கே.டி.ஜலீல்  உள்ளிட்ட எம்எல்ஏக்கள் பிரேசி லுக்கு ஆதரவு கருத்து தெரிவித்து அரசியல் கடந்து விளையாட்டிலும் புத்துணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.