3-வது இடத்தை பிடிப்பது யார்?
சுவீடன் - ஆஸ்திரேலியா இன்று மோதல்
9-வது சீசன் மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சனியன்று சுவீடன் - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது இடத்திற்கான ஆட்டம் நடைபெறுகிறது.
யாருக்கு 3-வது இடம்
இரு அணிகளின் பலம், பலவீனம் ஒப்பிடுகையில் சுவீடன் அணி சற்று பலமாக உள்ளது. தற்பொழுது மட்டுமல்ல ஒவ்வொரு சீசனிலும் சுவீடன் அணி பல மாக களமிறங்கி உலகக்கோப்பை தொடரை மிரட்டிவிட்டுதான் செல்லும். இதுவரை 3 முறை மூன்றாவது இடத்தை (1991, 2011, 2019) இடத்தை பிடித்துள்ள சுவீடன் அணி நடப்பு சீசனிலும் 4-வது முறையாக 3-வது இடத்தை எளிதாக பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல உள்ளூர் ரசிகர்களின் பேராதரவுடன் நடப்பு சீசன் உலகக்கோப்பையில் முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறி தோல்வியை தழுவியுள்ள ஆஸ்திரேலியா அணிக்கு பெரியளவு அனுபவம் இல்லையென்றாலும், நடப்பு சீச னில் சளைக்காமல் போராடும் ஆட்டத்திறனை கொண்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய அணி ஏதாவது அதிர்ஷ்ட வாய்ப்புடன் 3-வது இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுவீடன் - ஆஸ்திரேலியா
வெற்றி வாய்ப்பு
நேரம் : மதியம் 1:30 மணி
இடம் : சன்கார்ப் மைதானம், பிரிஸ்பேன், ஆஸ்திரேலியா
சேனல் : தூர்தர்சன் ஸ்போர்ட்ஸ், பேன் கோடு (ஒடிடி)
பரிசுத்தொகை
3-வது இடம் : ரூ. 21 கோடி
4-வது இடம் : ரூ. 20 கோடி
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்
காலிறுதியில் ஜோகோவிச்
அமெரிக்காவின் முன்னணி டென்னிஸ் தொடரான சின் சினாட்டி டென்னிஸ் தொடரின் 122-வது சீசன் தற்போது நடுகட்டத்தை தாண்டி யுள்ள நிலையில், வெள்ளியன்று நடை பெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் டென்னிஸ் உலகில் இரண்டாம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் நாட்டின் அதிரடி வீரர் மோன்பிள்ஸை வீழ்த்தி காலிறு திக்கு முன்னேறினார். இதே பிரிவு மற்றொரு 3-வது சுற்று ஆட்டத்தில் அதிகம் எதிர்பார்த்த சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா 4-6, 2-6 என்ற செட் கணக்கில் வீழ்ந்து ஆஸ்திரேலியாவின் பர்செல்லிடம் வீழ்ந்து வெளியேறினார். செர்பியாவின் லஜோவிஜ் காயம் கார ணமாக வெளியேற அமெரிக்காவின் (தரவரிசை - 9) பிரிட்ஜ் நேரடியாக காலிறுதிக்கு முன்னேறினார். பெகுலா அவுட் இளம் வீராங்கனைகளின் அதிரடி யால், மகளிர் ஒற்றையர் பிரிவு அதிர்ச்சி தோல்விகளால் சின்னாபின்னமாகி உள்ள நிலையில், வெள்ளியன்று நடை பெற்ற 3-வது சுற்று ஆட்டத்தில் தர வரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பெகுலா, தரவரிசை யில் இல்லாத செக் குடியரசின் மேரி யிடம் 4-6, 0-6 என்ற செட் கணக்கில் வீழ்ந்து வெளியேறினார். மேலும் அதிர டிக்கு பெயர் பெற்ற கஜகஸ்தானின் ரைபகினா (தரவரிசை 4) காயம் காரண மாக வெளியேற இத்தாலியின் ஜாஸ்மின் பாவோலினா காலிறுதிக்கு முன்னேறினார். பெலாரஸின் சபலென் கா, துனிசியாவின் ஜபியூர், அமெரிக் க்காவின் கவுப் ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
டூட்டி சந்த் : 4 ஆண்டு தடை
இந்திய நட்சத்திர ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த் ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார். கடந்த ஆண்டு டிசம்பர் 5 அன்று அவரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரியை சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தி இருப் பது தெரிய வர, கடந்த ஜனவரி மாதம் இடைக்கால தடை விதித்து சர்வ தேச ஊக்க மருந்து தடுப்பு முகமை உத்தர விட்டது. இதை திர்த்து டூட்டி சந்த் மேல்முறை யீடு செய்தார். மேல் முறையீட்டில் டூட்டி சந்த் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதியாக உள்நாட்டு, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை காலம் இந்த ஆண்டு ஜனவரி 3 அன்று முதல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த தடை உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய டூட்டி சந்த்துக்கு 21 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு முகமை.