ரசிகர்களின் மனங்களை வென்ற ரொனால்டோ
தங்கள் (போர்ச்சுக்கல்) அணி தோற்றாலும், தோல்விக்கும் ரொனால்டோவிற்கும் எந்த பங்கும் கிடையாது. பயிற்சியாளர் சான்டோஸின் “ஈகோ” பிடிவாதத்தை நன்கு உணர்ந்த போர்ச்சுக்கல் ரசிகர்கள் ரொனால்டோவை களமிறக்க கோஷங்கள் எழுப்பினர். ஆனால் சான்டோஸ் கண்டுகொள்ளவில்லை. ஈகோவுக்கு பரிசாக இறுதியில் படுதோல்வி மட்டுமே கிடைக்க ரொனால்டோ கண்ணீருடன் முன்கூட்டியே மைதானத்தை விட்டு வெளியேறினார். அவருக்கு ஆறுதல் கூற சில ரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர். மேலும் சமூக வலைத்தளங்களில் ரொனால்டோவிற்கு ஆதரவாக பல்வேறு ஹேஸ்டேக்குகள் டிரெண்ட் ஆகின. உலக்கோப்பையை கையில் ஏந்தாவிட்டாலும், உலக கால்பந்து ரசிகர்களின் மனதை வென்றார் ரொனால்டோ.
கத்தார் சீசன் தொடரில் பிரம்மாண்ட பார்முடன் காலிறுதி வரை முன்னே றிய ரொனால்டோவின் போர்ச்சுக்கல் அணி, ஆப்பிரிக்காவின் இளம் அணியான மொராக்கோவிடம் 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்ந்து தொடரில் இருந்து வெளியேறியது. போர்ச்சுக்கல் அணியின் தோல்விக்கு காரணம் அந்த அணியின் ஆட்டத்திறன் அல்ல. போர்ச்சுக்கல் கேப்டன் ரொனால்டோ - பயிற்சியாளரின் ஈகோ பிரச்சனைதான். இந்த ஈகோ பிரச்சனை நாக் அவுட் முதலே இருந்த நிலையில், ரொனால்டோவை பெஞ்சில் அமர வைத்து கடைசி நேரத்தில் களமிறக்கி தனது ஈகோ பிரச்சனைக்கு நிவாரணம் தேடிக்கொண்டார் சான்டோஸ். மேலும் ரொனால்டோ இல்லாமல் இளம் வீரர் ராமோஸால் போர்ச்சுக்கல் காலிறுதிக்கு கரையேற, சான்டோஸின் “ஈகோ” முற்றி, காலிறுதி ஆட்டத்தில் மொராக்கோவின் பலத்தை அறியாமல் நாக் அவுட் சுற்று போன்று ரொனால்டோவை மீண்டும் பெஞ்சில் அமர வைத்தார் சான்டோஸ். மொராக்கோவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் போர்ச்சுக்கல் அணி வீரர்கள் தடுமாறினர். 42-வது நிமிடத்தில் மொராக்கோ கோலடிக்க பயிற்சியாளர் சான்டோஸ் அதிர்ச்சி அடைந்து 51-வது நிமிடத்தில் ரொனால்டோவை களமிறக்கினார். ரொனால்டோ களமிறங்கினாலும் மொராக்கோ அணியின் தாக்குதலை சமா ளித்து பதிலுக்கு கோலடிக்க முடியாமல் போர்ச்சுக்கல் அணி திணறியது. இறுதியில் மொராக்கோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று புதிய வரலாறுடன் அரை யிறுதிக்கு முன்னேறியது. தோல்வியை ஜீரணிக்க முடியாமல் போர்ச்சுக்கல் ரசிகர்கள் கண்ணீர் விட்டு கதறினர்.