கால்பந்து விளையாட்டில் எல்லாம் மாறிவிட்டது. முன்னர் பந்தை கடத்துவது, புத்திசாலியுடன் எதிரணி வீரர்களிடம் பந்தை பறிப்பது, கோலடிக்கக் கூடாது என்பதற்காக பந்தை திசை திருப்புவது என பல்வேறு செயல்பாடுகள் ஒழுக்கமான அளவில் இருந்தன. சின்னஞ்சிறு மோதல்கள், காயங்கள் இருந்தாலும் பெரியளவு தாக்குதல் இல்லாமல் இருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக தாக்குதல் பாணி மாறிவிட்டது. நட்சத்திர வீரரை தாக்கினால் அந்த அணி கோல டிக்க முடியாது என்ற எண்ணத்துடன் எதிரணி தடுப்பாட்ட வீரர்கள் தாக்குதலில் ஈடுபடுகின்றனர். ரஷ்யாவில் நடைபெற்ற 21-வது உலகக்கோப்பையில் தனி வீரர்கள் மீதான தாக்குதல் முறை 50% ஆக அதிகரித்து இருந்த நிலையில், நடப்பு சீசனில் தொடக்கத்திலேயே 100% தனி நபர் தாக்குதல் முறை உள்ளது. திங்களன்று நடைபெற்ற இங்கி லாந்து - ஈரான் ஆட்டத்தில், இங்கிலாந்து கேப்டன் ஹாரி மீது பலமுறை குறிவைக்கப்பட்டது. ஆனால் ஆட்டத்தின் நடுபாதி யில் ஹாரி காயமடைந்தார். சுருண்டு விழுந்தார். சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் களமிறங்கினார்.