games

img

தேசிய ஜூனியர் ஐவர் கால்பந்து போட்டியில் சிறப்பாக விளையாடிய திருச்சி வீரர் இந்திய அணிக்கு தேர்வு!  

தேசிய ஜூனியர் ஐவர் கால்பந்து போட்டியில் சிறப்பாக விளையாடிய திருச்சி வீரர் பிரணவ் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.    

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 14ஆவது ஜூனியர் தேசிய ஐவர் கால்பந்து போட்டி, கடந்த 20 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தியாவை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.    

இதில் தமிழக அணி சார்பில் திருச்சியில் இருந்து பயிற்சியாளர் முகமதுபர்தீன் தலைமையில் வீரர்கள் பிரணவ், யோகேஷ்வரன், முகமது சமீர், சிவசோமு, குருதேவ், பாணிதான், இலக்கியன், ஜாபர், ஜமால், கிறிஸ்டோபர் ஜோயல் ஆகிய 10 வீரர்கள் கலந்து கொண்டனர்.  

தேசிய அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழக அணி 3ஆவது இடம் பிடித்தது. தமிழகத்திலிருந்து கலந்து கொண்ட விளையாட்டு வீரர்களில் யோகேஸ்வரன் மற்றும் முகமதுசபீர் ஆகியோர் சிறந்த விளையாட்டு வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.    

மேலும் சிறப்பாக விளையாடிய திருச்சியை சேர்ந்த வீரர் பிரணவ், இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  

இதையடுத்து, வெற்றி பெற்ற வீரர்கள் நேற்று இரவு திருச்சி ரயில் நிலையத்துக்கு வந்த நிலையில் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் உற்சாகமாக வரவேற்றனர். 

;