games

img

ஒற்றுமைக்கு உரமிட்டு கால்பந்து உலகின் நட்சத்திர அந்தஸ்தை பெற்ற மொராக்கோ

விளையாட்டு உலகில் உலகக்கோப்பை தொடர் என்றால் நாட்டின் பெயரில் ஒன்றிணைவார்கள் அல்லது வம்சாவளி என்ற அடிப்படையில் வேற்று குடிஉரிமை உள்ளவர்கள் சொந்த நாட்டிற்கு ஆதரவு அளிப்பார்கள். மற்ற படி ஆசிய, ஐரோப்பா என கண்டங்களின் அடிப்படையில் ஒன்றிணைய மாட்டார்கள். இதுதான் விளையாட்டு உலகின் ஆதரவு தொடர்பான விதி. ஆனால் கத்தாரில் நடைபெற்ற 22-வது சீசன் உலகக்கோப்பை தொடரில் ஒரே ஒரு நாடு 2 சம்பவம் மூலம் கால்பந்து உலகை மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. அந்த நாடு யாதெனில் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மொராக்கோ தான். 

வரலாறு - 1

கடந்த காலங்களை விட திடீரென  உத்வேகம் பெற்ற மொராக்கோ, கத்தார் சீசனில் குரூப் சாம்பியன் அந்தஸ்து டன் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. நாக் அவுட்டில் பிரான்ஸ் அணியையும், காலிறுதியில் போர்ச்சுக்கல் அணியையும் துவம்சம் செய்து அரையிறுதிக்கு முன்னேறி ஆப்பிரிக்கா சார்பில் வரலாறு படைத்தது. இறுதிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடப்பு சாம்பியன் அந்தஸ்தில் பிரான்ஸ் அணியிடம் வீழ்ந்தது. சனிக்கிழமை யன்று நடைபெற்ற 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் குரோஷியா அணியிடம் வீழ்ந்து 4-ஆம் இடம் பிடித்தது. உலகக்கோப்பை வரலாற்றில் ஆப்பிரிக்க கண்டம் சார்பில் அரையிறுதிக்கு முன்னேறிய அணி, உலகக்கோப்பை கால்பந்தில் 4-ஆம் இடம் பெற்ற  ஆப்பிரிக்க கண்ட அணி என இரட்டை  வரலாற்றுடன் கத்தாரில் இருந்து விடை பெற்றது மொராக்கோ.

வரலாறு - 2

விளையாட்டு உலகில் நாடுகளின் ஆதரவு பற்றை கடந்து கண்டங்களாக ஒன்றிணைய வைத்துள்ளது மொராக்கோ தேசம். கத்தார் சீசனில் அரையிறுதிக்கு முன்னேறிய நாளிலிருந்து ஆப்பிரிக்க கண்ட மக்கள், கறுப்பின மக்கள்  அனைவரும் ஒன்றிணைந்து மொராக்கோவிற்கு ஆதரவாக களமிறங்கினர். இதுபோக ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலிய கண்டங்களில் உள்ள நாடுகளில் தங்கி வேலை பார்க்கும் மற்றும் குடியுரிமை உள்ளவர்கள், கறுப்பின மக்கள் மொராக்கோவிற்கு ஆதரவாக கத்தாருக்கு படையெடுத்தனர். பண வசதி இல்லாதவர்கள் தாங்கள் இருக்கும் வேறு நாட்டு பகுதிகளில் நிகழ்ச்சி போல ஒன்றி ணைந்து போட்டியை கண்டு கொண்டாடினர். ஆப்பிரிக்க கண்ட ஒற்றுமை யால் பிரான்ஸ், பெல்ஜியம் நாடுகளில் இனவெறி மோதலும் உருவாகியது.  காலிறுதி வெற்றிக்கு பிறகு பாலஸ்தீன கொடியை வைத்து கொண்டாடிய தால் பாலஸ்தீன மக்களும், இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீன ஆதரவு மக்களும் மொராக்கோவின் கால்பந்து மிரட்டலை கொண்டாடினர். முக்கியமாக பாலஸ்தீனத்தில் மிகப்பெரிய கொண்டாட்டங்களும் நடை பெற்றன. பாலஸ்தீன ஆதரவால் சிரியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், அரபு நாடுகள், துனிசியா, துருக்கி உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் ஒன்றாக ஒன்றிணைந்து மொராக்கோவிற்கு ஆதரவு அளித்தன. 

ஒரு மாத வளர்ச்சி

ஒரு மாத வளர்ச்சி முன்பெல்லாம் மொராக்கோ என்ற நாடு இருப்பதாக ஒரு சிலருக்கு தெரியாது. 2022-ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் வரை உலகக்கோப்பை கால்பந்து மூலம் மொராக்கோ நாடு ஆப்பிரிக்காவில் எங்கோ  இருக்கிறது என்றுதான் இருந்தது. டிசம்பர் மாதம் மொராக்கோ என்ற சின்ன ஆப்பிரிக்க நாடு உலகக்கோப்பை யில் நன்றாக விளையாடி வருகிறது என்ற பேச்சு பரவியது. ஆனால் தற்போது விளையாட்டு உலகில் தலைப்புச் செய்தியாகவும், உலகில் முக்கியமான நாட்டின் செய்திகளை போல வலம் வந்து கொண்டிருக்கிறது. உலகக்கோப்பை வெற்றி, ஆப்பிரிக்க மற்றும் உலக கறுப்பின மக்கள் ஒற்றுமை என பல்வேறு சம்பவங்களால் வெறும் ஒரு  மாதத்தில் உலகின் பிரபலமான நாடாக மாறியுள்ளது மொராக்கோ. வெறும் 3.7 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு உலகக்கோப்பை கால்பந்து தொடர் மூலம் உலக ஒற்றுமை  என்றால் என்னவென்று பாடம் எடுத்து சென்றுள்ளது. கோப்பை வெல்லவிட்டாலும் “மக்கள் ஒற்றுமை” என்ற சிறப்பு கோப்பையுடன் தாய்நாடு திரும்பியது மொராக்கோ. இப்படி பல்வேறு கிளைமேக்ஸ்களால் அர்ஜெண்டினா,  பிரேசில், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருப்பது போல மிக குறுகிய காலத்தில் உலகம் முழுவதும் ரசிகர்கள் கொண்ட அணியாக மாறியுள்ளது மொரோக்கோ.