தற்போதைய நவீன கால்பந்து உலகில் சொந்த நாட்டு ரசிகர்களை விட வேறு நாட்டு ரசிகர்களை அதிகம் கொண்ட பெருமை அர்ஜெண்டினா கால்பந்து அணியின் கேப்டனும், கால்பந்து உலகின் நட்சத்திர வீரருமான மெஸ்ஸி தான். தற்போதைய 22-வது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெறும் கத்தார் நாட்டில் குவிந்துள்ள உலக நாடுகளின் ரசிகர்கள் அர்ஜெண்டினா நாட்டின் ஜெர்சியை அணிந்து ஊர் சுற்றி வருகிறார்கள். இதனால் அர்ஜெண்டினா அணி தங்கியிருக்கும் பகுதி, பயிற்சி பெறும் பகுதி, அந்த அணி விளையாடும் மைதானத்தின் பகுதிகளில் பலத்த சர்வதேச பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. இது மெஸ்ஸிக்கு கடைசி உலகக்கோப்பை என்பதால் கோப்பையுடன் அவரை ஓய்வு பெற வைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் கடன் வாங்கி கத்தார் வந்துள்ளனர் அவரது உலக ரசிகர்கள்.
கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்படும் கால்பந்து உலகின் நட்சத்திர அணியான அர்ஜெண்டினா அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஆசிய அணியான சவூதி அரேபியாவை எதிர்கொள்கிறது. கத்தார் நாட்டின் 2-ஆம் மிகப்பெரிய நகரான லுசைல் நகரத்தில் உள்ள ஐகானிக் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தை காண திங்களன்று முதலே ரசிகர்கள் குவிந்தனர். அர்ஜெண்டினா நாட்டிற்கு சொந்த நாட்டு ரசிகர்களை விட உலகம் முழுவதும் உள்ள வேறு நாட்டு ரசிகர்கள் அதிகம். மேலும் ரசிகர்கள் அர்ஜெண்டினா ஜெர்சியான வெளிர் நிற ஊதா (ஸ்கை புளு) ஜெர்சியை ஒரு உடையாக அணிந்து வருவதால் லுசைல் நகரமே வானத்தின் பிரிகை போன்று காட்சி அளிக்கிறது.