ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் அரையிறுதி போட்டிகள் வரும் 11 ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது.
8-வது இந்தியன் சூப்பர் லீக் ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி கோவாவில் கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு தொடங்கிய இந்த தொடர், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த தொடரின் அரையிறுதி போட்டிகள் வரும் 11 ஆம் தேதி தொடங்குகிறது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்த அரையிறுதி போட்டிக்கு ஜாம்ஷெட்பூர், கேரளா , ஐதராபாத், ஏ.டி.கே மோகன் பகான் அணிகள் தகுதி பெற்றுள்ளன.
வரும் 11 ஆம் தேதி நடைபெறும் அரையிறுதி போட்டியில் ஜாம்ஷெட்பூர் – கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிகள் மோதுகின்றன. 12 ஆம் தேதி நடைபெறும் அரையிறுதி போட்டியில் ஐதராபாத் எஃப்சி- ஏ.டி.கே மோகன் பகான் அணிகள் மோதுகின்றன. மார்ச் 20 ஆம் தேதி இறுதி ஆட்டம் நடைபெறவுள்ளது.