அர்ஜெண்டினா போல கால்பந்து உலகில் பிரேசிலுக்கும் அதிக ரசி கர்கள் உள்ளனர். மற்ற நாட்டு ரசிகர்களை போல பிரேசில் ரசிகர்கள் தொடக்கத்திலேயே கத்தார் வரவில்லை. காரணம் பிரேசில் அணிக்கு முதல் ஆட்டம் 25-ஆம் தேதி என்பதால் கடந்த 2 நாட்களாக தான் கத்தார் வந்து கொண்டி ருக்கின்றனர். இதனால் தொடக்க நாளில் கத்தாரில் மஞ்சள் நிறம் குறை வாகவே பிரதிபலித்தது. இந்நிலையில், பிரேசில் அணியின் முதல் ஆட்டம் தொடங்க இன்னும் ஒரே ஒரு நாள் உள்ள நிலையில், போட்டி நடக்கும் லுஸைல் நகரத்தில் எங்கு பார்த்தாலும் மஞ்சள் நிறம் மயக்கி வருகிறது. பிரேசில் அணி தனது லீக் ஆட்டத்தில் செர்பியாவை எதிர்கொள்கிறது.