இந்தியாவில் முதன்மையான விளையாட்டாக இருப்பது கிரிக்கெட். அதற்கு அடுத்து ஹாக்கி, டென்னிஸ், கபடி, பேட்மிண்டன் ஆகிய விளையாட்டுகள் இருந்தா லும், உலகின் முதன்மையான விளை யாட்டான கால்பந்திற்கு இந்தியா வில் ரசிகர்கள் மிகவும் குறைவுதான். கிட்டத்தட்ட நாட்டின் ஒட்டுமொத்த விளையாட்டு ரசிகர்களில் 10% ரசி கர்கள் கால்பந்தில் ஆர்வமாக உள்ள னர். இந்த 10 சதவீதத்தில் கேரளா, மேற்கு வங்கம், கோவா ஆகிய மாநி லங்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். தற்போது 22-வது சீசன் உல கக்கோப்பை கால்பந்து தொடர் உல கம் முழுவதும் பெரும் திருவிழா போன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையை போன்று சிறப்பு திருவிழா போன்று கொண் டாடப்பட்டு வருகிறது. கேரள இடது சாரி அரசும் ரசிகர்களை உற்சாகப் படுத்த சிறப்பு ஏற்பாடுகள்,
விளம்பரம் என பல்வேறு நடவடிக்கையில் கள மிறங்கி அசத்தி வருகிறது. கேர ளாவை விட பிரம்மாண்டமாக செய்யாவிட்டாலும் கோவா, மேற்கு வங்க மாநில ரசிகர்களும் உலகக் கோப்பைக்காக பேசும் அளவிற்கு கட்அவுட், சுவர் வர்ண பூச்சுகள் என களமிறங்கி எங்கள் மாநிலத்திலும் “கால்பந்து காய்ச்சல்” பரவுகிறது என கால்பந்து உலகிற்கு வழக்கமான கிளைமேக்ஸ் காட்சிகளை டிரெண்ட் செய்துள்ளனர். பொதுவாக இந்தியாவில் கால் பந்து காய்ச்சல் கேரளா, கோவா, மேற்குவங்கம் ஆகிய மாநிலத்தில் வீசும் என அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் என்றாலும், தற்போது இந்த கால்பந்து காய்ச்சலால் மேலும் ஒரு மாநிலம் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலம் கோவாவின் அண்டை மாநிலமான மகாராஷ்டிராதான். மகாராஷ்டிராவின் முக்கிய நகரான கோலாப்பூரின் ஆசாத் சவுக்கில் 30 அடிக்கு அர்ஜெண்டினா அணியின் கேப்டனும், கால்பந்து உலகின் நட்சத்திர வீரருமான மெஸ்ஸிக்கு கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது. இது போக நகரின் முக்கியமான இடங்களில் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. பிரேசில், அர்ஜெண்டினா ஜெர்சிகளின் விற்பனையும் கோலாப்பூரில் களைகட்டி வருகிறது.