games

img

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா 2022

விளையாட்டு உலகில் முதன்மையான திருவிழாவான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 22-வது சீசன் அரபு நாடான கத்தாரில் நடைபெற்று வருகிறது.

இன்றைய ஆட்டங்கள்

முன்களத்தில் போதிய அனுபவம் இல்லாமல் இருக்கும் மொராக்கோ அணி தடுப்பாட்டத்தை நம்பி மட்டுமே களமிறங்குகிறது. இது ஒருபக்கம் மைனஸ் என்றால் அனைத்து பிரிவுகளிலும் பலமாக உள்ள குரோஷியாவை மொராக்கோ சமாளிப்பது மிகவும் சிரமமான விஷயம். இந்த ஆட்டத்தில் குரோஷியா எளிதாக வெல்லும்.

மொராக்கோ - குரோஷியா

நேரம்: மதியம் 3:30 மணி; இடம்: அல் பாய்த்

இரு அணிகளை ஒப்பிடுகையில் ஜெர்மனி அணி சற்று பலத்துடன் இருப்பதால் அந்த அணி வெற்றி பெற கூடுதல் சாதகம் உள்ளது. எந்த நேரத்தில் எப்படி விளையாடும் என கணிக்க முடியாத ஜப்பான் அணியிடம் ஜெர்மனி சற்று கவனமாக விளையாடுவது நல்லது. முதல் கோலடித்துவிட்டால் ஜப்பான் அணியிடம் பந்தை பறிப்பது கடினம்.

ஜெர்மனி - ஜப்பான்

நேரம்: மாலை 6:30 மணி; இடம்: கலீபா

அனுபவ அணியான ஸ்பெயின் கடந்த கால தோல்வி களில் பாடம் கற்று நடப்பு சீசனில் அதிரடி வீரர்களு டன் களமிறங்குவதால் இந்த ஆட்டத்தில் எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பெயினுடன் ஒப்பிடுகை யில் கோஸ்டாரிகா பலத்தில் குறைந்த நிலையில் உள்ளது. தடுப்பாட்டத்தில் கோஸ்டாரிகா ஏதேனும் மாயாஜாலம் காட்டினால் ஆட்டம் டிராவில் முடிவடையலாம்.

ஸ்பெயின் - கோஸ்டாரிகா

நேரம்: இரவு 9:30 மணி; இடம்: அல் துமமா

அனுபவ வீரர்கள் அதிகம் உள்ளதால் இந்த ஆட்டத்தில் பெல்ஜியம் எளிதாக வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனடா கடந்த காலங்களை விட நடப்பு சீசனில் சற்று மாறுபட்ட வீரர்களுடன் களமிறங்குவதால் வெற்றிக்காக போராடும். ஆட்டம் டிராவை நோக்கி பயணித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.

பெல்ஜியம் - கனடா

நேரம் : நள்ளிரவு 12:30 மணி 
(புதனன்று அதிகாலை); இடம் : அல் ரய்யான் 

சேனல் : ஸ்போர்ட்ஸ் 18, ஜியோ சினிமா (ஓடிடி) இலவசமாக காணலாம்.

சீரானது ஜியோ... 

22-வது சீசன் உலகக்கோப்பை கால்பந்து  போட்டியை ஓடிடியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யும் உரிமையை அம்பானியின் ஜியோ சினிமா (JIO CINEMA) பெற்றுள்ளது. தொடக்க போட்டி உட்பட முதல்  இரண்டு நாட்கள் சாட்டிலைட்  பிரச்சனை காரணமாக நேரடி  ஒளிபரப்பில் அடிக்கடி தொய்வு ஏற்பட்டது. ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்டிவிகளில் நேரடியாக பார்க்கும் விளையாட்டு  ரசிகர்கள் டுவிட்டரில் நேரடியாக புகார் அளித்தனர். இந்  நிலையில், செவ்வாயன்று நள்ளிரவுமுதல் ஜியோ சினிமா தடங்கலின்றி போட்டியை ஒளிபரப்பு செய்தது.

சூதாட்டமா? 

முதல் ஆட்டத்தில் கத்தார் நாடு வெற்றி பெற ஈகுவடார் நாட்டிற்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக செய்தி ஒன்றும் சர்வதேச அளவில் உலாவி வருகிறது. ஆனால் இது பற்றி பிபா கண்டுகொள்ளவில்லை. மேலும் ஆட்டத்தின் போக்கை பற்றி தான் சூதாட்டம் பற்றி கணிக்க இயலும். ஆட்டத்தின் போக்கை உற்றுநோக்கினால் ஈகுவடார் அணி மிக கடுமையாக போராடியது. சூதாட்டத்தை கணிக்கும் அளவிற்கு விளையாட்டுப் போட்டியை ஆராயாமல் சாதாரண சமூக வலைதள கருத்துக்களை செய்திகளாக வெளியிடுவது தான் வேதனையான விசயமாக உள்ளது.