அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரெஞ்சுக் கோப்பைக்காக இந்த அணி விளையாட இருந்த நிலையில், தற்போது அணியில் நான்கு வீரர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரீஸ் செயிண்ட் ஜெர்மெய்ன் அணியில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து வீரர்கள் உள்பட அணியில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன் முடிவில், பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி , ஜூயன் பெர்னட், செர்ஜியோ ரிகோ மற்றும் 19 வயதான நேதன் பிடுமஸாலா ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை பிஎஸ்ஜி அணி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.