ஆல்வரேஜ் கலக்கல் - இறுதியில் அர்ஜெண்டினா
கத்தார் உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புதனன்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான அர்ஜெண்டினா அணியும், 21-வது உலகக்கோப்பை சீசனில் 2-ஆம் இடம் பிடித்த குரோஷியா அணிகள் மோதின. லுஸைல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பாக நகர்ந்தது. ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் பவுலால் கிடைத்த பெனால்டி வாய்ப்பை அர்ஜெண்டினா அணி கேப்டன் கோலாக மாற்ற, குரோஷியா வீரர்கள் தடுப்பாட்டத்தை கைவிட்டு முன்களத்தில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். 39-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா இளம் வீரர் ஆல்வரேஜ் குரோஷியாவின் பல்வேறு தடுப்பு சுவர்களை கடந்து தந்திரமாக கோலடித்து அசத்தினார். முதல் பாதியில் அர்ஜெண்டினா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் குரோஷியா அணி சிறிது நேரம் ஆதிக்கம் செலுத்தியது. 55-வது நிமிடத்திற்கு பிறகு அர்ஜெண்டினா மீண்டும் பந்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து 69-வது நிமிடத்தில் மெஸ்ஸியின் மாயாஜால கடத்தல் உதவியால் ஆல்வரெஜ் மீண்டும் கோலடிக்க, அர்ஜெண்டினா ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அவர்களின் ஆரவாரத்தால் லுஸைல் நகரமே அதிர்ந்தது. பல்வேறு முயற்சி செய்தும் குரோஷியாவால் பதிலுக்கு ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியில் அர்ஜெண்டினா 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று 6-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
விடைபெறுகிறார் மெஸ்ஸி...
கத்தார் சீசன் உலகக்கோப்பை தொடர்தான் கடைசி உலகக் கோப்பை என கால்பந்து உலகின் நட்சத்திர வீரரும், அர்ஜெண்டினா கேப்டனு மான மெஸ்ஸி கூறியுள்ளார். அரையிறுதி போட்டி நிறைவு பெற்ற பின்பு அர்ஜெண்டினா ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மெஸ்ஸி கூறிய தாவது, “இதைச் சாதித்ததில் (இறுதிக்கு முன்னேற்றம்) மகிழ்ச்சியாக உள்ளேன். என்னுடைய உலகக்கோப்பைப் பய ணத்தை இறுதிச்சுற்றில் விளையாடி முடிக்கிறேன். அடுத்த உலகக் கோப்பை க்கு பல வருடங்கள் உள்ளன. என்னால் அந்த உலகக் கோப்பையில் விளையாட முடியும் எனத் தோன்றவில்லை. உலகக் கோப்பைப் பயணத்தை இதுபோல முடிப்பது சிறந்ததாகும். அர்ஜெண்டினா அணி மீண்டும் உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் விளையாடுகிறது. அனைவரும் இத்தருணத்தை அனுபவிக்க வேண்டும்” எனக் கூறினார்.
கோலடித்த மகிழ்ச்சியை மெஸ்ஸியுடன் கொண்டாடும் ஆல்வரேஜ்.
அர்ஜெண்டினா அரையிறுதியில் தோற்றது இல்லை
உலகக்கோப்பையில் 2 முறை சாம்பியன் (1978,1986) பட்டம் வென்றுள்ள அர்ஜெண்டினா இதுவரை 6 முறை இறுதிக்கு முன்னேறியுள்ளது.(1930,1978, 1986, 1990, 2014,2022). 4 முறை காலிறுதி யில் (1966,1998, 2006, 2010) வெளியேறியுள்ள அர்ஜெண்டினா, ஒருமுறை கூட அரையிறுதி யில் அர்ஜெண்டினா தோற்ற வரலாறு கிடையாது.
பதற்றம் இல்லாமல் அசத்திய அர்ஜெண்டினா...
பொதுவாக உலகக்கோப்பையில் நாக் அவுட் ஆட்டங்களுக்கு பிறகு ஒவ்வொரு அணியும் பதற்றமாகத்தான் விளையாடும். காரணம் கோப்பை கனவு, தேசியம் தொடர்பான அழுத்தம் என பல்வேறு கிளைமேக்ஸ் இருப்பதால் வீரர்களுக்கு அதிக பதற்றம் ஏற்படும். இதனால் சில அணிகள் பார்ம் பிரச்சனையில் சிக்கி விழிபிதுங்கும். ஆனால் 22-வது சீசன் முதல் அரையிறுதியில் அர்ஜெண்டினா வீரர்கள் பதற்றமே இல்லாமல் பயிற்சி ஆட்டங்களை போன்று விளையாடி கலக்கினர். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் மெஸ்ஸி, மார்டினெஸ், டி பவுல் போன்ற வீரர்கள் மட்டுமே சீனியர்கள். மற்ற அனைவரும் இளம் வீரர்கள் என்றாலும், அவர்களும் இயல்பாகவே விளையாடி அசத்தினர்.பொதுவாக உலகக்கோப்பையில் நாக் அவுட் ஆட்டங்களுக்கு பிறகு ஒவ்வொரு அணியும் பதற்றமாகத்தான் விளையாடும். காரணம் கோப்பை கனவு, தேசியம் தொடர்பான அழுத்தம் என பல்வேறு கிளைமேக்ஸ் இருப்பதால் வீரர்களுக்கு அதிக பதற்றம் ஏற்படும். இதனால் சில அணிகள் பார்ம் பிரச்சனையில் சிக்கி விழிபிதுங்கும். ஆனால் 22-வது சீசன் முதல் அரையிறுதியில் அர்ஜெண்டினா வீரர்கள் பதற்றமே இல்லாமல் பயிற்சி ஆட்டங்களை போன்று விளையாடி கலக்கினர். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் மெஸ்ஸி, மார்டினெஸ், டி பவுல் போன்ற வீரர்கள் மட்டுமே சீனியர்கள். மற்ற அனைவரும் இளம் வீரர்கள் என்றாலும், அவர்களும் இயல்பாகவே விளையாடி அசத்தினர்.
குரோஷியாவின் தோல்விக்கு காரணம்
காலிறுதியில் தடுப்பாட்டம் மற்றும் பெனால்டி அதிர்ஷ்டத்தில் பிரேசி லை வீழ்த்திய குரோஷியா, இதே பணியில் அர்ஜெண்டினாவை வீழ்த்தலாம் என்று களமிறங்கியது. முக்கியமாக அனைத்து பிரிவிலும் பிரம்மாண்ட பார்மில் இருக்கும் அர்ஜெண்டினாவை எளிதாக நினைத்து, அசால்ட்டாக விளையாடியது. சுனாமி வியூகம் அமைத்து வந்த அர்ஜெண்டினா தொடக்கம் முதலே தாக்குதல் நடத்த குரோஷியா விழிபிதுங்கியது. இதுபோக குரோஷியா கேப்டன் மோட்ரிச் மந்தமாக புரியாத வியூகங்களை வீரர்களுக்கு கொடுக்க, அதை இளம் வீரர்கள் உள்வாங்க சிரமப்பட்டனர். இதுதான் குரோஷியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
எளிமை நாயகன்...
அர்ஜெண்டினா ஆடும் ஆட்டங்களில் சாதாரண ஜெர்சி மற்றும் லோயர் (ஸ்போர்ட்ஸ் பேண்ட்) அணிந்து வீரர்களை நோக்கி சில உத்தரவுகளை மைதானத்தில் பறக்கவிட்டு மற்ற நேரம் அமைதியாக, சமத்து பிள்ளையாக பெஞ்சில் அமர்ந்து இருக்கும் ஒரு எளிமையான நபர்தான் அர்ஜெண்டினா அணியின் தலைமை பயிற்சியாளர் லயோனல் ஸ்கலோனி. மற்ற அணி பயிற்சியாளர்களை போல விலை உயர்ந்த கோட் சூட், அதிகார மனப்பான்மை என பல்வேறு செயல்களில் ஆதிக்கம் செலுத்துவார்கள். ஆனால் ஸ்கலோனி வீரர்களின் ஆட்டத்திறன், வெற்றி, முன்னேற்றம் மட்டுமே எண்ணமாக செயல்படுகிறார்.
கண் கலங்கிய ஸ்கலோனி
அரையிறுதிக்கு முன் னேறிய சந்தோசம், மைதானத்தில் ரசிகர்களின் ஆரவாரத்தை கண்டு அர்ஜெண்டினா அணியின் தலைமை பயிற்சியாளர் லயோ னல் ஸ்கலோனி ஆனந்தத்தில் கண்ணீர் விட்டு அழுதார். அவரை கேப்டன் மெஸ்ஸி கட்டி அணைத்து ஆனந்த ஆறுதல் வார்த்தை கூறினார்.
சோதனைகளை சாதனைகளாக மாற்றிய ஸ்கலோனி...
கத்தார் உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணி இளம் கன்று சவூதியிடம் தோற்று பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டது. அர்ஜெண்டினா நடப்பு சீசனில் அவ்வளவுதான் என்றும், நாக் அவுட் கூற தேறாது என்று தலைப்பு செய்திகள் கூட வெளியாகியது. இதை எல்லாம் கண்டுகொள்ளாமல், பார்ம் பிரச்சனையில் இருந்த அணியை மீட்டு, இளம் வீரர்களை போர்ப்படை போன்று தயராக்கி இறுதிக்கு அழைத்துச் சென்று வரலாறு படைத்துள்ளார் பயிற்சியாளர் ஸ்கலோனி.