விளையாட்டு உலகில் முதன்மையான திருவிழாவான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 22-வது சீசன் அரபு நாடான கத்தாரில் நடைபெற்று வருகிறது.
காலிறுதியில் அர்ஜெண்டினா
கத்தார் உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்று நிறை வடைந்து நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நடைபெறுவரும் நிலையில், முதல் நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் (சனியன்று இரவு 8:30 மணிக்கு) நெதர்லாந்து அணி அமெரிக்காவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் அணியாக காலி றுதிக்கு முன்னேறியது. ஞாயிறன்று அதிகாலை நடைபெற்ற 2-வது நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றான அர்ஜெண்டினா - ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. கடந்த கால சொதப்பல்களை கணக்கில் கொண்டு தொடக்கம் முதலே தாக்குதல் பாணி ஆட்டத்தை தொடங்கியது அர்ஜெண்டினா. ஆனால் ஆஸ்திரேலிய அணி தடுப்பு சுவர் அமைத்து மிக பலமான அளவில் தடுப்பாட்டத்தை கையிலெடுத்து அர்ஜெண்டினாவை மிரட்டியது. 35-வது நிமிடத்தில் கால்பந்து உலகின் நட்சத்திர வீரரும், அர்ஜெண்டினா அணியின் கேப்டனுமான
மெஸ்ஸி ஆஸ்திரேலியாவின் சுவரை நொறுக்கி சூப்பர் ஷாட் மூலம் கோலடித்தார். இதன் பிறகு ஆஸ்திரேலியா தடுப்பாட்டத்தை சுருக்கி கோலடிக்கும் முனைப்பில் களமிறங்கியது. 57-வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் டி பவுல் ஆஸ்தி ரேலியா கோல் கீப்பரை கணித்து புத்திசாலிதனமாக பந்தை பறிக்க முயன்றார். ஆனால் டி பவுலிடம் சிக்கா மல் பந்து வேறு பக்கம் நகர்ந்தது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அர்ஜெண்டினா வீரர் அல்வரேஜ் பின்புறமாக பந்தை திருப்புவது போன்று ஏமாற்றி கோலடித்து அசத்தினார். அதன் பிறகு இரு அணிகளின் அதிரடி ஆட்டங்களால் அஹமத் பின் அலி மைதானத்தில் அனல் காற்று வீசியது. 77-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் குட்வின் கோல் போஸ்ட் நோக்கி உதைத்த பந்தை அர்ஜெண்டினா வீரர் பெர்னாண்டஸ் தடுக்கச் சென்று அவரே ஒன் சைட் கோலாக அடித்து ஆஸ்திரேலியாவிற்கு ஒரு கோலை வாரி வழங்கினார். அதன் பிறகு பல்வேறு வகையில் முயற்சி செய்தும் ஆஸ்திரேலியாவால் பதிலுக்கு கோலடிக்க முடியவில்லை. இறுதியில் அர்ஜெண்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
மெஸ்ஸி 1000
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நாக் அவுட் சுற்று போட்டி கால்பந்து உலகின் நட்சத்திர வீரரும், அர்ஜெண்டினா அணியின் கேப்டனுமான மெஸ்ஸிக்கு 1,000-வது போட்டியாகும் (கிளப்,சர்வதேச போட்டி சேர்த்து). 1000-வது போட்டியில் கோலடித்ததன் மூலம் மெஸ்ஸி கால்பந்து உலகில் மொத்தம் 789 கோல்களை அசத்தியுள்ளார். இதுவரை 5 உலகக்கோப்பையில் விளையாடியுள்ள மெஸ்ஸி நாக் அவுட் சுற்றில் அடித்த முதல் கோல் இதுவாகும் (ஆஸ்திரேலியாவிற்கு எதிராக). மேலும் உலகக்கோப்பை தொடரில் அடித்த கோல்களின் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்த நிலையில், அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் டியகோ மாரடோனாவின் உலகக்கோப்பை தொடர் (8 கோல்) சசாதனையை முறியடித்து வரலாறு படைத்தார். இதுபோக 1000-வது போட்டியில் மெஸ்ஸி சிறந்த ஆட்ட நாயகனுக்கான விருதையும் வென்றார்.
யுத்தக் களமாக மாற்றிய ஆஸ்திரேலிய வீரர்கள்
அர்ஜெண்டினா அணிக்கெதிரான நாக் அவுட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் கோலடிப்பது, பந்தை பறிப்பது போன்ற செயல்களை விட அர்ஜெண்டினா வீரர்கள் மீது தனிநபர் தாக்குதலை அதிகமாக நடத்தினர். பயிற்சியாளரின் ஸ்கோலனியின் உத்தரவுக்கு ஏற்ப ஆஸ்திரேலிய வீரர்களின் தாக்குதலை கண்டுகொள்ளாமல் அர்ஜெண்டினா அணி வீரர்கள் ஆட்டத்தில் மீது மட்டுமே கவனம் செலுத்தினர். எனினும் ஆட்டத்தின் நடுப்பகுதியில் பந்தை பறிக்க அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்ஸியின் ஜெர்சியை ஆஸ்திரேலிய வீரர் பெக்கிச் பிடித்து இழுத்தார். பதிலுக்கு மெஸ்ஸியும் மோதலுக்கு தயாராக மைதானம் பரபரப்பில் உறைந்தது. நடுவர்கள் சகவீரர்கள் சமாதானப்படுத்த தொடர்ந்து போட்டி நடைபெற்றது.
இன்றைய நாக் அவுட் ஆட்டங்கள்
ஜப்பான் - குரோஷியா
நேரம் : இரவு 8:30 மணி
இடம்: அல் ஜனுவப்
யாருக்கு வாய்ப்பு?
இந்த ஆட்டத்தில் பலம், அனுபவம் அடிப்படையில் குரோஷியா அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது என்றாலும், லீக் ஆட்டங்களில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய குரூப் சாம்பியனான ஜப்பானை குரோஷியா சற்று கவனமாக எதிர்கொண்டால்தான் காலிறுதி வாய்ப்பு. அசால்ட்டாக நினைத்தால் குரோஷியா நாக் அவுட் தான்.
பிரேசில் - தென் கொரியா
நேரம் : நள்ளிரவு 12:30 மணி (செவ்வாயன்று அதிகாலை)
இடம் : 974
யாருக்கு வாய்ப்பு?
இந்த ஆட்டத்தில் பிரேசில் அணி எளிதாக வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும் கணிக்க முடியாத இளம் அணியான தென் கொரியாவை கவனமாக எதிர்கொண்டால் மட்டும் பிரேசில் அணியின் கோப்பை கனவிற்கு பாதை (காலிறுதி) கிடைக்கும்.
கால்பந்து உலகில் பிரபலமாகும் ஜப்பான்...
ஆசிய சாம்பியனான ஜப்பான் அணி, கத்தார் உலகக்கோப்பை சீசனில் 2 செயல்கள் மூலம் கால்பந்து உலகில் பிரபலமான அணியாக வளர்ந்துள்ளது.
1. வீரர்கள்: எவ்வித வரலாற்று பின்புலம் இன்றி 22-வது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் குரூப் “இ” பிரிவில் சாம்பியன் அணிகளான ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய அணிகளை பந்தாடி குரூப் சாம்பியன் அந்தஸ்துடன் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
2. ரசிகர்கள்: ஜப்பான் அணியின் ஆட்டங்களை கண்டு ரசிக்க வரும் அந்நாட்டு ரசிகர்கள் போட்டி முடிந்த பின்பு மைதானத்தில் கிடக்கும் குப்பைகளை தங்களது கைகளால் எடுத்து சுத்தம் செய்கின்றனர். அது தங்கள் நாட்டு ரசிகர்களின் குப்பை யாக இருந்தாலும் சரி, மற்ற நாட்டு ரசிகர்களின் குப்பையாக இருந்தால் என்ன? என்ற வேறுபாடு இல்லாமல் குப்பை - குப்பை தானே என்ற சொற்றோடரின் படி குப்பையை அகற்றி செல்கின்றனர்.
வெற்றியோ, தோல்வியோ சுத்தம் செய்துவிட்டு தான் நகருவோம்...
பொதுவாக மற்ற விளையாட்டு ரசிகர்களை விட கால்பந்து ரசிர்கர்கள் அதிகம் உணர்ச்சிவசப்பட்டு இருப்பார்கள். வெற்றி பெற்றால் அதிகம் கொண்டாடு வார்கள். தோற்றால் மைதானத்தை நொறுக்க கூட தயங்க மாட்டார்கள். இது கால்பந்து ரசிர்கர்களின் 80% குணநலன். ஆனால் ஜப்பான் ரசிகர்கள் இதற்கு நேர் மாறாக உள்ள னர். தனது அணி வெற்றி அடைந்தாலும் சரி, தோல்வி அடைந்தாலும் சரி குப்பையை அகற்றிவிட்டுதான் செல் கிறார்கள். எடுத்துக்காட்டாக குரூப் சுற்றின் 3 ஆட்டங்களி லும் ஜப்பான் ரசிகர்கள் குப்பையை எடுத்துச் சென்றார்கள். குரூப் சுற்றின் 3 ஆட்டங்களில் ஜப்பான் அணி ஸ்பெயின், ஜெர்மனி அணியை வீழ்த்தியது. கோஸ்டாரிகா அணியிடம் வீழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.