விளையாட்டு உலகில் முதன்மையான திருவிழாவான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 22-வது சீசன் அரபு நாடான கத்தாரில் நடைபெற்று வருகிறது.
அரையிறுதியில் அர்ஜெண்டினா
கத்தார் உலகக்கோப்பை தொட ரின் 2-வது காலிறுதி ஆட்டத் தில் அர்ஜெண்டினா அணி, நெதர் லாந்து அணியை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே பரபரப்பாக நடை பெற்ற இந்த ஆட்டத்தின் முழுநேர முடி வில் (90 நிமிடம்) இரு அணிகளும் 2 கோல்களுடன் சமனில் இருந்ததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. கூடு தல் நேரத்தில் இரு அணிகளும் மேற் கொண்டு கோலடிக்காமல் இருந்ததால் பெனால்டி சூட் அவுட் முறை கடைபிடிக் கப்பட்டது. பரபரப்பாக நடைபெற்ற பெனால்டி சூட் அவுட்டில் அர்ஜெண்டினா 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
தனி ஒருவரிடம் வீழ்ந்த பிரேசில்
கால்பந்து உலகில் நட்சத்திர கோல் கீப்பரான குரோஷியா வின் லிவாகோவிச் (27) அனைத்து நேரங்க ளிலும் சிறப்பாக செயல்படக்கூடியவர். அதி லும் பெனால்டி சூட் அவுட்டில் பதற்றமே இல் லாமல் வெற்றியை தேடித் தரக்கூடிய லிவா கோவிச், கடந்த நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் ஜப்பான் அணியிடம் இருந்து குரோஷியா வை பெனால்டி சூட் அவுட்டிலிருந்து மீட்டு காலிறுத்திக்கு அழைத்து அழைத்து வந்தார். அதே போல காலிறுதியில் தனி ஒருவராக பிரேசில் அணியிடம் இருந்து குரோஷியாவை காப்பாற்றி அரையிறுதிக்கும் அழைத்து வந் துள்ளார் லிவாகோவிச். சுருக்கமாக சொன் னால் குரோஷியாவிடம் பிரேசில் வீழ்ந்தது என்று சொல்வதை விட தனி ஒருவரிடம் (லிவா கோவிச்சிடம்) வீழ்ந்தது என்று தான் கூற வேண் டும்.
கண்ணீர் கடலில் நனைந்த கத்தார் கனத்த இதயத்துடன் விடை பெற்றது மஞ்சள் படை
உலகக்கோப்பை கால்பந்து வர லாற்றில் அனைத்து சீசன் களிலும் (22) பங்கேற்ற அணி யும், 5 முறை உலக சாம்பி யன் மகுடத்தை வென்ற பிரே சில் அணி 22-வது சீசனில் கண்டிப்பாக கோப்பை வெல் லும் என அடித்து கூறும் அள விற்கு லீக், நாக் அவுட் ஆட் டங்களில் மிரட்டலான ஆட் டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் முதல் காலிறுதி ஆட்டத்தில் குரோஷியா அணியிடம் கடுமையாக போராடி பெனால்டி சூட் அவுட்டில் (4-1) வெளியேறியது பிரே சில். இந்த அதிர்ச்சி தோல்வியால் பிரேசில் வீரர்கள் மைதா னத்திலேயே அழுதனர். இம்முறையும் கோப்பை இல்லாமல் வீட்டிற்கு செல்கிறோமே என மஞ்சள் படை (பிரேசில் ரசி கர்கள்) மைதானத்திலேயே கண்ணீர் விட்டு கதறியது. மஞ்சள் படையின் கண்ணீரால் எஜுகேஷன் சிட்டி நகரமே அமைதியா னது. இருப்பினும் கனத்த இதயத்துடன் தங்கள் அணிக்கு ஆறு தல் அளித்து சில ரசிகர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
புகழ்பெற்ற கால்பந்து பத்திரிகையாளர் போட்டியின் போதே மரணம்
புகழ்பெற்ற கால்பந்து பத்திரிகையாளர் கிராண்ட் வால் (48 - அமெரிக்கா) அர்ஜெண்டினா- நெதர்லாந்து அணிகள் மோதிய காலிறுதி ஆட்டத்தில் செய்தி சேகரிக்கும் பொழுதே மாரடைப்பால் (?) இருக்கையில் விழுந்து உயிரிழந்தார். நவம்பர் 21-ஆம் தேதி வேல்ஸ் - அமெரிக்கா (லீக்) ஆட்டத்தின் பொழுது ஓரினச்சேர்க்கை (LGBTQ) உரிமைகளுக்கு ஆதரவாக வால் ரெயின்போ டி-ஷர்ட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.