22-வது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொட ரில் தற்போது குரூப் சுற்றின் 2-ஆம் கட்ட சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த காலங்களை போல் அல்லாமல் நடப்பு சீசனில் முதல் சுற்று ஆட்டங் களே மிக பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், கால்பந்து உலகம் அதிகம் எதிர்பார்த்த குரூப் “சி” பிரி வின் அர்ஜெண்டினா - மெக்ஸிகோ அணிகள் மோதிய ஆட்டம் லுஸைல் மைதானத்தில் ஞாயிறன்று அதி காலை நடைபெற்றது. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று, குரூப் “சி” பிரிவில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறு வதற்கான வாய்ப்பு பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
ஆட்டத்தின் சுவாரஸ்ய சம்பவங்கள்:
- முதல் பாதியில் இரு அணிகளும் கோலடிக்க பெரி யளவு முயற்சிகளில் ஈடுபடாமல் தடுப்பாட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தியது. இதனால் முதல் பாதியில் ஒவ்வொரு நிமிடமும் அனல் பறந்தது. எனினும் மெக்ஸிகோ வீரர்கள்தான் தடுப்பாட்டத்தில் ஆதிக்கம் செலுத்தினர்.
- இரண்டாம் பாதியில் சுதாரித்துக்கொண்ட அர் ஜெண்டினா பிரேசில் பாணியில் முன்கள தடுப்பாட்ட (பந்தை பறிக்கும் தாக்குதல்) ஆட்டத்தை வெளிப் படுத்தி அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்தது.
- அர்ஜெண்டினா அணியின் வெற்றியை தடுக்க மெக்ஸிகோ வீரர்கள் காயத்தை ஏற்படுத்தும் அள விற்கு தாக்குதல் நடத்தினர். இதை எல்லாம் சமா ளித்துதான் அர்ஜெண்டினா அணி வெற்றி பெற் றது.
- ஆட்டத்தின் முழுநிமிடங்களிலும் அர்ஜெண்டினா வின் பயிற்சியாளர் லயோனல் ஸ்கலோனி தனது இருக்கையில் அமராமல் நின்று கொண்டே ஒவ் வொரு உத்தரவுகளையும் பிறப்பித்தார். (கிட்டத் தட்ட 96 நிமிடங்கள் - ஒன்றரை மணிநேரத்திற்கு மேலாக). ஸ்கலோனி போலவே ரசிகர்களும் அமரவே இல்லை.
- பந்து மைய பகுதியில் தான் அதிக நேரம் சுழன்றது. (பால் கட்டுப்பாடு ; அர்ஜெண்டினா - 59%, மெக்ஸிகோ - 41%) * மெக்ஸிகோ வீரர்களின் உடல் தாக்குதல் பாணி ஆட்டத்தை கண்டித்து அர்ஜெண்டினா ரசிகர்கள் கோஷங்களை எழுப்பினர்.
- அர்ஜெண்டினா சார்பில் அடிக்கப்பட்ட இரண்டு கோல்களும் மிரட்டலான வேகத்தில் அதிரடியாக போடப்பட்டது. இதில் பெர்னாண்டஸ் அடித்த கோல் சூப்பர் பாஸ்டில் பறந்தது. மெஸ்ஸி புத்திக்கூர்மை யாக செயல்பட்டு மின்னல் வேகத்தில் உதைத்து கோலாக்கினார்.(மெஸ்ஸி : 64-வது நிமிடம், பெர் னாண்டஸ்: 87-வது நிமிடம்)