games

img

புரோ கபடி லீக் : குஜராத் ஜெயன்ட்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை 

புரோ கபடி லீக்கின் இரண்டாவது நாளான இன்று குஜராத் ஜெயன்ட்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றனர்.

8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நேற்று முதல் தொடங்கிய நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்குத் தகுதி பெறும்.

இந்நிலையில், முதல் நாளான நேற்றிரவு நடந்த தொடக்க ஆட்டத்தில் மும்பை அணி (யு மும்பா) 46-30 புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சை வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து அரங்கேறிய 2-வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி 40-40 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. தொடர்ந்து உ.பி. யோதா மற்றும் பெங்கால் வாரியர்ஸ் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் 38-33 என்ற கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் தொடரைக் கைப்பற்றியது. 

அதனைத் தொடர்ந்து இன்று இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் போட்டியில்  தீபக் நிவாஸ் தலைமையிலான பிங்க் பாந்தர்ஸ் அணி, குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அதை தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு  நடைபெறும் போட்டியில் ஜோகிந்தர் நர்வால் தலைமையிலான டெல்லி அணி, புனே அணியை  எதிர்கொள்கிறது. இரவு 9.30 மணிக்குத் தொடங்கும் போட்டியில் பலம் வாய்ந்த பாட்னா அணியை ஹரியானா அணி எதிர்கொள்கிறது.

;