games

img

விளையாட்டு - புரோ கபடி 2023 முன்னிலை பெறுமா தெலுங்கு டைட்டன்ஸ்?

புரோ கபடி 2023 முன்னிலை பெறுமா தெலுங்கு டைட்டன்ஸ்?

புரோ கபடி தொடரின் 10-ஆவது சீசன் நடுகட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், 5-ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரான நொய்டாவில் நடைபெற்று வருகிறது. சனியன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறும் நிலையில், முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி மும்பை அணியை எதிர்கொள்கிறது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள தெலுங்கு டைட்டன்ஸ் கடந்த 3 ஆட்டங்களில் தோல்வியை கண்டாலும், ஆட்டதிறனில் ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளதால் சனியன்று நடைபெறும் மும்பை அணிக்கெதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று இழந்த பார்மை மீட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கு டைட்டன்ஸ் - மும்பை
(47-ஆவது லீக்)
நேரம் : இரவு 8 மணி

உத்தரப்பிரதேசம் - தில்லி
(48-ஆவது லீக்)
நேரம் : இரவு 9 மணி

இன்றைய ஆட்டங்கள்

சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஹாட் ஸ்டார் (ஒடிடி - இலவசம் இல்லை, சந்தா கட்டணம் செலுத்தி இருந்தால் பார்க்கலாம்)

கபடியில் மோதல் போக்கு நல்லதல்ல

விளையாட்டு உலகில் மோதல்  போக்கு என்பது சகஜமான விச யம் என்றாலும் கபடி விளையாட்டில் வீரர்களுக்கு இடையேயான மோதல் போக்கு ஆபத்தில் முடியும். இரு அணி அல்லது தனிப்பட்ட முறையில் இரு அணி வீரர்களுக்கு மோதல் ஏற்பட்டால், மோதல் போக்கை ஏற்படுத்திய வீரர் அல்லது அணியினர் எதிரணி ஏரியாக்குள் ரெய்டு வந்தால் எதிரணி வீரர்கள் ஒன்றுகூடி அல்லது மோதல் போக்கால் கோபத்துடன் இரு க்கும் வீரர் ஆக்ரோஷமாக தாக்குதல் பாணி தடுப்பாட்டத்தை வெளிப்படுத்து வார்கள். புரியும்படி சொன்னால் முட்டி தூக்கி எறிவார்கள், பிடிப்பட்டு கீழே கிடக்கும் வீரர்கள் மீது பாய்ந்து விழு வார்கள், பிடிக்கும் பொழுது மூர்க்க மாக மோதி எலும்புமுறிவு ஏற்படும்  அளவிற்கு பல்வேறு சம்பவங்கள் அரங் கேறும். அதேபோல  மோதல் போக்கு டன் ரெய்டு  செல்லும் வீரர்கள் எதிரணி வீரர்களை ஆக்ரோஷமாக அடிப்  பார்கள், உதைப்பார்கள், பிடிக்கப் பட்டால் எதிரணி வீரர்களை முட்டி தூக்கி எறிவார்கள்.  கிராமங்களில் படுமோசம் இந்தியாவில் நகரங்களை விட  கிராமப்புறங்களில்தான் கபடி போட்டி கள் அதிகம் நடைபெறும் நிலையில், மோதல் போக்கால் கபடி விளை யாட்டு களத்தில் மட்டுமின்றி போட்டி முடிந்த பின்பும் வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்படும். மதுரை, ராமநாத புரம், புதுக்கோட்டை, தேனி ஆகிய மாவட்டங்களில் கபடி விளையாட்டால் ஏற்பட்ட வன்முறையால் கொலை சம்பவங்கள் கூட அரங்கேறியுள்ளன.இதனால் தான் புரோ கபடி தொடர் பல்வேறு விதிமுறைகள் மற்றும் கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது. கபடி மட்டுமின்றி ரக்பி, குத்துச் சண்டை, மல்யுத்தம், கால்பந்து ஆகிய விளையாட்டுகளிலும் மோதல் போக்கு உக்கிரமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெறும் 4 பந்துவீச்சாளர்களை மட்டும் களமிறக்கி இந்திய அணியை புரட்டியெடுத்த தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாட வருகிறது. 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் செவ்வாயன்று தொடங்கிய நிலையில், இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்க்ஸ் வெற்றியை ருசித்தது. இந்த ஆட்டத்தில் மிக சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் வெறும் 4 பந்துவீச்சாளர்களை மட்டுமே களமிறக்கி டெஸ்ட் பிரிவில் பலமான அணியான இந்தியாவை இன்னிங்ஸ் வெற்றியுடன் புரட்டியெடுத்ததுதான். அதுவும் சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் இந்திய அணியை சாய்த்து  1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று அசத்தியுள்ள தென் ஆப்பிரிக்கா அணி யின் செயல்பாடு கிரிக்கெட் உலகில் பலத்த பாராட்டை பெற்றுள்ளது. 2-ஆவது டெஸ்ட் போட்டி ஜனவரி 3-ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.