பாரா ஒலிம்பிக் 2024
பதக்க ஆட்டங்கள் இன்று தொடக்கம்
17ஆவது சீசன் பாரா ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் புதனன்று நள்ளிரவு சிறப்பு கலைநிகழ்ச்சிகளுடன் துவங்கியது. செப்டம்பர் 8 வரை நடைபெறும் இந்த பாரா ஒலிம்பிக் தொடரில் 169 நாடுளைச் சேர்ந்த வீரர் - வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். 22 விளையாட்டு பிரிவு களில் மொத்தம் 549 வகையான போட்டி கள் நடைபெற உள்ள நிலையில், இந்தியா சார்பில் 84 வீரர்-வீராங் கனைகள் ( 52 வீரர்களும், 32 வீராங் கனைகளும் பதக்க வேட்டை நிகழ்த்த பாரீஸில் பாரா ஒலிம்பிக் களமிறங்கி யுள்ளனர்.
இந்நிலையில், இந்த பாரா ஒலிம்பிக் தொடரின் பதக்கம் வழங்கும் ஆட்டங் கள் இந்திய நேரப்படி வியாழனன்று முதல் துவங்க உள்ளன.வியாழனன்று சைக்கிளிங், நீச்சல், டேபிள் டென்னிஸ், டேக்வாண்டோ ஆகிய விளை யாட்டுப் போட்டிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.
அமெரிக்க ஓபன் டென்னிஸ்
5:35 மணிநேரம் போராட்டம் : காச்சாநோவை வெளியேற்றிய எவன்ஸ்
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் தொடரின் 144ஆவது சீசன் நியூயார்க் நகரில் ஆகஸ்ட் 26 அன்று தொடங்கியது.
இந்திய நேரப்படி செவ்வா யன்று நள்ளிரவு நடைபெற்ற ஆட வர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 22ஆவது இடத்தில் உள்ள ரஷ்யாவின் காச்சாநோவ், தரவரி சையில் இல்லாத பிரிட்டனின் எவன்ஸை எதிர்கொண்டார்.
எவன்ஸை விட காச்சாநோவ் அதிரடிக்கு பெயர் பெற்றவர் என்ற நிலையில், இந்த ஆட்டத்தில் காச்சாநோவ் எளிதாக வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எவன்ஸ், காச்சாநோவுக்கு இணையாக அதிரடியை வெளிப்படுத்திய நிலையில், ஆட்டத்தின் ஒவ்வொரு செட்டும் அனல் பறந்தது. 5:35 மணி நேரம் வரை நீடித்த இந்த ஆட்டத்தில் 6-7 (6-8), 7-6 (7-2), 7-6 (7-4), 4-6, 6-4 என்ற செட் கணக்கில் காச்சாநோவை வீழ்த்தி எவன்ஸ் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார். முன்னணி வீரர்களான அல்காரஸ் (ஸ்பெயின்), பவுல் (அமெரிக்கா), மெத்வதேவ் (ரஷ்யா), டி மினார் (ஆஸ்திரேலியா) ஆகியோ ரும் 2ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
பெகுலா அபாரம்
மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 6ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பெகுலா, தரவரிசையில் இல்லாத அமெரிக்காவின் ரோஜர்சை எதிர் கொண்டார். சூப்பர் பார்மில் உள்ள பெகுலா 6-4 , 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். பெகுலா போல பவோலினி (இத்தாலி), யூலா (உக்ரைன்), சம்சோனோவா (ரஷ்யா), ஹதாத் மாயா (பிரேசில்) உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகளும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.
கார்டியோஸ்பிரேட்டரி அரெஸ்ட் தாக்குதல்
உருகுவே கால்பந்து வீரர் உயிரிழப்பு
கடந்த ஆகஸ்ட் 22 அன்று உருகுவே நாட்டின் தேசிய அணியின் தடுப்பாட்ட வீரரான ஜுவான் இஸ்கியர்டோ (27), பிரேசில் நாட்டின் சாவ் பாலோ நகரில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற கிளப் ஆட்டத்தில் விளையாடிக் கொண்டு இருந்தார்.
போட்டியின் பொழுதே ஜுவான் மயங்கி திடீரென கீழே விழுந்த நிலையில், அவரை உடனடியாக மீட்டு சாவ் பாலோ நகரில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
5 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பொழுதிலும் செவ்வாயன்று இரவு 9.38 மணிக்கு (இந்திய நேரப்படி புதனன்று) ஜுவான் உயிரிழந்ததாகவும், கார்டியோஸ்பிரேட்டரி அரெஸ்ட் (இதயம் சார்ந்த பாதிப்பு) காரணமாக அவர் உயிரிழந்தார் என அவருக்கு சிகிச்சை அளித்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. உயிரிழந்த ஜுவான் இஸ்கியர்டோவுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தான் அவருக்கு மகன் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.