சீனா கடும் எச்சரிக்கை
24-வது குளிர்கால ஒலிம்பிக் தொடர் அடுத்தாண்டு (2022) சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஆஸ்திரேலியா திடீரென குளிர்கால ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளது. இதனை அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் உறுதிப்படுத்தியுள்ளார். ஏற்கெனவே அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகள் புறக்கணிப்பதாக அறி வித்துள்ள நிலையில், தற்போது ஆஸ்திரே லியாவும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ள தால் சீன அரசு கடும் எச்சரிக்கையை தெரி வித்துள்ளது. குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணிக்கும் ராஜதந்திர முடிவுகளை எடுத்துள்ள நாடுகள் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.