45 நாடுகள் பங்கேற்ற சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் 19-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 16 நாட்கள் நடைபெற்ற இந்த தொடர் ஞாயிறன்று நிறைவு பெறுகிறது. மற்ற அனைத்து போட்டிகளும் சனியன்று நிறைவு பெற்ற நிலையில், இறுதி நாளில் நீச்சல், கராத்தே போட்டிகள் மட்டும் நடைபெறுகின்றன. அதன்பிறகு இறுதி விழா நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
வில்வித்தையில் 2 தங்கம், வெள்ளி, வெண்கலம்
மகளிர் காம்பவுண்ட் தனிநபர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஜோதி சுரேகா, தென் கொரியாவின் சோ சாவோனை எதிர்கொண்டார். தொடக்க செட்டில் தென் கொரியாவின் சோ ஆதிக்கம் செலுத்தினாலும், அடுத்த 3 செட்களில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா ஆதிக்கம் செலுத்தி 149 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றார். 145 புள்ளிகளை பெற்ற சோ சாவோன் வெள்ளிப்பதக்கம் வென்றார். ஹாட்ரிக் தங்கம் வென்றார் ஓஜாஸ் ஆடவர் காம்பவுண்ட் தனிநபர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர்களான ஓஜாஸ் பிரவீன் - அபிஷேக் வெர்மா மோதினர். ஒரே நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் என்றா லும் புள்ளிகளை குவிப்பதில் இருவரும் மறைமுக மோதலில் ஈடுபட்ட நிலையில், ஓஜாஸ் பிரவீன் 149 - 147 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார். இறுதிவரை போராடிய அபிஷேக் வெர்மா வெள்ளிப்பதக்கம் வென்றார். இப்பிரிவில் தென் கொரிய வீரர் யாங் ஜாவோன் வெண்கலப்பதக்கம் வென்றார். ஓஜாஸ் பிரவீன் நடப்பு சீசன் ஆசிய விளை யாட்டுப் போட்டியில் 3 தங்கப்பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதீதி-க்கு வெண்கலம் மகளிர் காம்பவுண்ட் தனிநபர் பிரிவு வெண்கலப்பதக்கத்திற்கான ஆட்டத்தில் இந்தி யாவின் அதீதி கோபிசந்த், இந்தோனேசியாவின் பத்லி ரடித் என்ற வீராங்கனை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அதீதி கோபிசந்த் 149 - 145 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப்பதக்கம் வென்றார்.
பதக்கப் பட்டியல்
தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1.சீனா 194 108 67 369
2.ஜப்பான் 48 62 68 178
3.தென்கொரியா 39 55 89 183
4.இந்தியா 28 35 41 104
மகளிர்
மகளிர் கபடி பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி சீன தைபே அணியை எதிர்கொண்டது. இரு அணிகளும் அதிரடியாய் விளை யாட ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும் அனல் பறந்தது. கடைசி நேரத்தில் கடுமையாக போராடி 26-25 என்ற கணக்கில் இந்திய அணி தங்கப்பதக் கம் வென்றது. இறுதி வரை சிறப்பாக விளையாடிய சீன தைபே வெள்ளிப் பதக்கமும், ஈரான், நேபாளம் அணிகள் வெண்கலப்பதக்கமும் வென்றது.
பேட்மிண்டனில் தங்கப்பதக்கம்
ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ராங்கி ரெட்டி - சிராக் ஷெட்டி, தென் கொரியாவின் சோய் - கிம் ஜோடியை எதிர்கொண்டது. முதல் சர்வீஸ் முதலே அதிரடியை கையிலெடுத்த இந்திய ஜோடி முதல் செட்டை 21-18 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய ராங்கி ரெட்டி - சிராக் ஷெட்டி 21-16 என்ற செட் கணக்கில் 2-வது செட்டையும் கைப்பற்றி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றது. தென் கொரிய ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது.
ஆடவர்
ஆடவர் கபடி பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஈரான் அணியை இந்தியா எதிர்கொண்டது. முதல் பாதியிலேயே ஆதிக்கம் செலுத்திய இந்தியா 15 -10 புள்ளிகளுடன் முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியில் ஈரான் அணி ஆட்டம் அனல் பறந்தது. எனினும் கடைசி நேரத்தில் சுதாரித்த இந்திய அணி 33 - 29 என்ற கணக்கில் ஈரானை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது. ஈரான் வெள்ளிப்பதக்கமும், பாகிஸ்தான், சீன தைபே அணிகள் வெண்கலப்பதக்கமும் வென்றன.
இந்திய கிரிக்கெட் அணிக்கும் தங்கம்
ஆடவர் கிரிக்கெட் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆப்கா னிஸ்தான் அணியை எதிர்கொண்டது. முதலில் 18.2 ஓவர்க ளில் 5 விக்., இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்திருந்த பொழுது மழைகாரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்ட நிலையில், தரவரிசை அடிப்படையில் இந்திய அணிக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் அணிக்கு வெள்ளிப்பதக்கமும், வங்க தேச அணிக்கு வெண்கலப்பதக்கமும் வென்றது. ஏற்கெனவே மகளிர் கிரிக்கெட் பிரிவில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது என்பது குறிப் பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் இன்று உலகக்கோப்பை கிரிக்கெட்
13-வது சீசன் உலகக்கோப்பை இந்தியாவில் வியாழனன்று தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் நவம்பர் 19 வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில் தனது முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. தமிழ்நாட்டில் நடைபெறும் இந்த ஆட்டம் விடுமுறை நாளான ஞாயிறன்று நடைபெறுகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா
இடம் : எம்.ஏ.சிதம்பரம் மைதானம்,
சென்னை, தமிழ்நாடு
நேரம் : மதியம் 2:00 மணி