games

img

நரிந்தர் பத்ரா ராஜினாமா

இந்திய விளையாட்டுத்துறையில் சர்வ தேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவர், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐ.ஓ.ஏ.) தலைவர் என இரண்டு முக்கிய பதவியில் இருப்பவர் நரிந்தர் பத்ரா.  சமீபத்தில் ஹாக்கி இந்தியா அமைப்பின் ஆயுட்கால உறுப்பினர் என்ற அடிப்படையில் அதன் பிரதிநிதியாக ஐ.ஓ.ஏ.  தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். விளையாட்டுத் துறையில் அடுத்தடுத்து கிடைக்கும் பதவிகளால் கடுப்படைந்த ஒருதரப்பு நரிந்தர் பத்ரா ஐ.ஓ.ஏ. தலைவராக நீடிப்பதை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த  உயர்நீதிமன்றம்,”ஹாக்கி இந்தியா அமைப்பில் நரிந்தர் பத்ரா ஆயுட்கால உறுப்பினராக நிய மிக்கப்பட்டது சட்டவிரோதமானது. தேசிய விளையாட்டு விதி முறைக்குட்பட்டு இருக்கவில்லை” என்று தீர்ப்பளித்தது. 

நீதிமன்ற உத்தரவால் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவியில் இருந்து நரிந்தர் பத்ரா நீக்கப்பட்டார். இதன் காரணமாக தற்போது பத்ரா சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார். தனிப் பட்ட காரணங்களுக்காக தலைவர் பதவியில் இருந்து ராஜி னாமா செய்வதாக பத்ரா தெரிவித்துள்ளார். ஹாக்கி, ஒலிம்பிக் துறைகளில் மிகுந்த அனுபவம் கொண்ட நரிந்தர் பத்ரா ராஜினாமா இந்திய விளையாட்டு உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.