games

img

தீக்கதிர் விளையாட்டு செய்திகள்

இந்தியாவின் முதல்நிலை வீரருமானார்
உலக சாம்பியனை வீழ்த்திய பிரக்ஞானந்தா! 

நெதர்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில், தமிழக வீரர்  பிரக் ஞானந்தா அபார வெற்றி பெற்றார். தன்னை விட கிட்டத்தட்ட 200 புள்ளி கள் அதிகம் பெற்று- உலக சாம்பியனாக திகழும் சீன வீரர் ஜிஎம் டிங் லிரனை தோற்கடித்ததன் மூலம், தனது அபார மான திறமையை பிரக்ஞானந்தா மீண்டும் உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளார்.

விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு டாடா ஸ்டீல் செஸ் போட்டியில் நடப்பு உலக சாம்பியனை தோற்கடித்த 2-வது இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார்.

அத்துடன், ஃபிடே தரவரிசை பட்டி யலில் இந்தியாவின் சாம்பியன் வீரர்  விஸ்வநாதன் ஆனந்த் 2748 புள்ளு களுடன் இருக்கும் நிலையில், 2748.3 புள்ளிகள் பெற்று ஆனந்தையும் பிரக் ஞானந்தா பின்னுக்குத் தள்ளியுள்ளார். இதன் மூலம் இந்திய செஸ் தர வரிசைப் பட்டியலில் பிரக்ஞானந்தா முதலிடம் பெற்றுள்ளார். பிரக்ஞானந்தா கடந்த 2018 ஆம் ஆண்டு அவரது 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற வெற்றி சிறப்பு வாய்ந்தது..!

நடப்பு உலக சாம்பியனை வீழ்த்தியது தொடர்பாக பேசியிருக்கும் பிரக்ஞானந்தா, “நான் மிக எளிதாக  சமன் செய்துவிட்டதாக உணர்ந்தேன், பின்னர் எப்படியோ அவருக்கு விஷயங்கள் தவறாகப் போகத் தொடங்கின. நான் சிப்பாய்களை வீழ்த்திய பிறகும் அது பிடிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்று உணர்ந்தேன். எந்த நாளும், ஒரு வலிமையான வீரரை  வென்றால், அது எப்போதும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் அவர்களை வெல்வது மிகவும் எளிதானது அல்ல. கிளாசிக்கல் செஸ்ஸில் உலக சாம்பியனுக்கு எதிராக முதல் முறையாக வெற்றி பெறுவது நன்றாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

ஹாட்ஸ்டார் ஓடிடி-யில் 19 வயதுக்குட்பட்டோர் ஐசிசி உலகக் கோப்பை

சர்வதேச கிரிக் கெட் கவுன்சி லின் (ஐசிசி) 19 வயது க்கு உட்பட்டோருக் கான உலகக்கோப் பைத் தொடர் ஜன வரி 19 அன்று தென் ஆப்பிரிக்காவில் துவங்குகிறது.  இத்தொடரில் 16 சர்வதேச அணிகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியனான இந்தியா தன் முதல் ஆட்டத்தில் வங்கதேச அணியைச் சந்திக்கிறது.

இத்தொடரில், அணிகள் 4 குழுக் களாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடத்தப்படும். 23 நாட்களில் 48 போட்டி கள் நடைபெறும். இதில், 5 முறை  உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, மிகவும் வலுவான அணி களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த உலகக் கோப்பை தொடரின் போட்டிகளை, ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இலவச மாகக் காணலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சுழற்பந்துக்கு சாதகமான ஆடுகளங்களை அமைத்தாலும்
எங்களுக்கு கவலை இல்லை
இங்கிலாந்து அணி துணைக் கேப்டன் ஒல்லி போப் பேட்டி

இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொட ரில் விளையாட உள்ளது. இதையடுத்து, முதல் இரண்டு போட்டிகளுக்கான ரோகித் சர்மா தலைமையில், 16 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள் ளது. இதில் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகிய  4 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள் ளனர்.

இந்த தொடருக்கான ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்படும் என்பதையே வீரர் களின் தேர்வு காட்டுகிறது. இந்நிலையில் டெஸ்ட் தொட ருக்கான பயிற்சிக்காக அபுதாபிக்கு புறப்படும் முன்பு, இங்கிலாந்து அணி யின் துணை கேப்டன் ஒல்லி போப் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள் ளார். அதில், “இங்கிலாந்தில், நாங்கள் எங்கள் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றவாறு ஆடுகளத்தில் அதிக புற் களை விட்டு விடுவோம். எனவே இந்தி யாவும் தங்கள் சுழற்பந்து வீச்சாளர் களுக்கு ஏற்றவாறு ஆடு களத்தை அமைப்பதில் ஆச்சரியமில்லை. முதல் பந்திலிருந்தே ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதக மாக இருந்தாலும்,  நாங்கள் எந்த குறையும் சொல்ல மாட்டோம்.  அதை எதிர்த்துப் போராடுவதற் கான ஒரு முறையைக் கண்டுபிடிக்க முயற்சி செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

தொடரின் முதல் போட்டி ஜனவரி 25 அன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்க உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 2 அன்று விசாகப்பட்டினத்தி லும், 3ஆவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 அன்று ராஜ்கோட்டிலும் தொடங்கு கிறது. நான்காவது போட்டி பிப்ரவரி 23 அன்று ராஞ்சியிலும், தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7 அன்று தர்மசாலா விலும் தொடங்குகிறது. ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில்,ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், கேஎஸ் பாரத், துருவ் ஜூரல், அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஆவேஷ்கான் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.