2023 ஆம் ஆண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டில் 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது இதனை தொடர்ந்து தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் கேலோ விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
தற்போது நடப்பாண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த ஒன்றிய அரசு அனுமதியளித்துள்ளது.