games

img

டிச.30 முதல் ஜன.2 வரை ஜம்மு-காஷ்மீரில் தேசிய அளவிலான உறைவாள் சண்டை போட்டி

கும்பகோணம் டிச.27 - தேசிய அளவிலான 23 ஆவது உறை வாள் சண்டை போட்டி ஜம்மு-காஷ்மீரில் நடைபெறுகிறது.  13 ஆவது மாநில உறைவாள் சண்டை போட்டி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. தமிழகம் முழுவதிலிருந்தும் 400 பேர்  கலந்து கொண்டனர். இதில் கும்ப கோணம் சாய் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் பங்கேற்றதில், 42 பேர் வெற்றி பெற்று பல பதக்கங்களை பெற்றனர். அவர்கள் அனைவரும் தேசிய அளவிலான உறைவாள் சண்டை போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் டிசம்பர் 30 முதல் ஜனவரி 02 வரை ஜம்மு-காஷ்மீரில் நடைபெறும், 23 ஆவது தேசிய அளவி லான உறைவாள் சண்டை போட்டி யில் கலந்து கொள்வதற்காக சர்வதேச உறைவாள் போட்டி நடுவரும் தமிழ்நாடு உறைவாள் சங்க பொதுச் செயலாளருமான ஜெ. செந்தில்குமார் தலைமையில், துணைச் செயலாளர் செல்வம் உள்ளிட்டோருடன் கும்ப கோணம் பகுதியைச் சேர்ந்த 42 மாணவ- மாணவிகள் கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் ஜம்மு-காஷ்மீர் சென்றனர். இப்போட்டியாளர்களை வழி யனுப்பும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு உறை வாள் சங்க மாநில தலைவர் கார்த்திகே யன், நடுவர் எஸ்.ஜெயஸ்ரீ மற்றும் பெற்றோர் வாழ்த்தினர்.