ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் அறிமுக போட்டியில் முச்சதம் அடித்து பீகாரை சேர்ந்த வீரர் சகிபுல் கனி சாதனை படைத்துள்ளார்.
முதல்தர போட்டியான ரஞ்சி டிராபியில் பீகார்-மிசோரம் அணிகள் இடையிலான ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பீகார் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்த போட்டியில் பீகார் அணிக்காக 22 வயதான வீரர் சகிபுல் கனி சிறப்பாக விளையாடினார். இந்நிலையில் மிசோரம் அணிக்கு எதிரான போட்டியில், முதல் தர கிரிக்கெட்டில் அறிமுக போட்டியில் முச்சதம் விளாசி பீகார் வீரர் சகிபுல் கனி சாதனை படைத்துள்ளார்.
இந்த ஆட்டத்தில் 405 பந்துகளில் 56 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 341 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.