games

img

டென்னிஸ் மைதானத்திற்குள் புகுந்த நச்சுப் பாம்பு

விளையாட்டு மைதானங்களில் வீரர் - வீராங்கனைகள், ரசிகர்களை தவிர்த்து நாய், பூனை, பறவைகள், பாம்புகள் அடிக்கடி விசிட் அடிப்பது வழக்கம். இதில் பூனை, பறவைகள் பெரியளவு தொந்தரவு தராது. ஆனால் நாய், பாம்புகள் மைதானத்தையே ரணகளமாக்கி விடும்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெறும் முக்கிய சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான பிரிஸ்பேன் டென்னிஸ் தொடர் சனி யன்று (மகளிர் பிரிவுக்கு மட்டும்) தொடங்கியது. இந்த தொடருக்கான ஆடவர் தகுதி சுற்று ஆட்டங்கள் சனி யன்று நடைபெற்றது. முன்னணி அதிரடி வீரரும், ஆஸ்திரியருமான டோமினிக் தியம்  - ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ்  மெக்கபே மோதிய தகுதி சுற்று ஆட்ட த்தின் பொழுது அதிக நச்சுத்தன்மை கொண்ட பாம்பு உள்ளே புகுந்து சுமார் 40 நிமிடத்திற்குள் மேல் ஆட்டம் காண்பித்தது. அதன்பின் பாம்புபிடி க்கும் தன்னார்வலர் கடுமையாக போராடி பாம்பை பிடித்துச் சென்றார். அதன்பின் ஆட்டம் தொடர்ந்து நடை பெற்றது. இந்த ஆட்டத்தில் 2-6, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் டோமினிக் தியம் வெற்றி பெற்று நேரடிச்சுற்றுக்கு முன்னேறினார்.

பக்கவாதத்துடன் உயிரிழப்பை ஏற்படுத்தும்
முதலில் டென்னிஸ் வீரர்கள் மட்டை யை வைத்து பாம்புடன் விளையாடும் நோக்கில் அலட்சியமாக அதன் அரு கிலேயே நின்று கொண்டு இருந்தனர். போட்டி அமைப்பாளர்கள் எச்சரித்தும் வீரர்கள் கண்டுகொள்ளவில்லை. அதன்பிறகு பாம்பு பிடிக்கும் நபர், “இந்த பாம்பு பழுப்பு நிறமாக  இருப்பதால் அதிக நச்சு வாய்ந்தது. இது கடித்தால் நரம்பு மண்ட லத்தை தாக்கி பக்கவாதம் மற்றும் கட்டுப்படுத்த முடியாத இரத்தப் போக்குடன் உயிரிழப்பை ஏற்படுத்தும்” என எச்சரித்த பின்பு வீரர்கள் அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர்.