games

img

விளையாட்டு...

ஆசிய கபடி சாம்பியன்ஷிப் 8-வது முறையாக கோப்பை வெல்லுமா இந்தியா?

6 ஆண்டுகளுக்கு பிறகு தென் கொரியாவின் பூசன் நகரில் நடைபெற்று வரும் 9-வது ஆடவர் ஆசிய கபடி சாம்பியன்ஷிப் தொடரில் முன்னணி அணியான பாகிஸ்தான் பங்கேற்காத நிலையில், இந்தியா, ஈரான், சீன தைபே, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங் ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 3-வது நாளான வியாழனன்று 3 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் சீன தைபே 37-29 என்ற கணக்கில் ஜப்பானையும், 2-வது ஆட்டத்தில் இந்தியா 33-28 என்ற கணக்கில் ஈரானையும், கடைசி லீக் ஆட்ட த்தில் சீன தைபே 70-25 என்ற கணக்கில் தென்கொரியாவையும்வீழ்த்தின.  இந்நிலையில், தான் பங்கேற்ற 4 ஆட்டங்களிலும் தோல்வியே சந்திக்காமல் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

இன்று இறுதி ஆட்டம்

ஆசிய கபடி சாம்பியன்ஷிப் தொடரின் கடைசி நாளான வெள்ளியன்று காலை 10:30 மணிக்கு இறுதி ஆட்டம் நடைபெறுகிறது. அதற்கு முன் காலை 6:30 மணிக்கு ஈரான் அணி, ஜப்பானை எதிர்கொள்கிறது. தொடர்ந்து காலை 7:30 மணிக்கு ஹாங்காங் அணியை, இந்தியா எதிர்கொள்ளும் நிலையில், காலை 9:30 மணிக்கு ஹாங்காங் அணி, தென் கொரியாவை எதிர்கொள்கிறது. இந்த லீக் ஆட்டங்கள் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிக்கு முன்னேறும். இந்திய அணி ஏற்கெனவே இறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், இந்திய அணியுடன் மோதும் மற்றொரு அணி வெள்ளியன்று நடைபெறும் லீக் ஆட்டங்களின் முடிவில் தெரியும்.

கோப்பை வெல்லுமா இந்தியா?

இதுவரை நடைபெற்ற 8 ஆசிய கபடி சாம்பியன்ஷிப் தொடரில் 7 தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 2003இல் மலேசியாவில் நடைபெற்ற இந்தியா பங்கேற்கவில்லை. அதனால் இந்தியா ஒரு சாம்பியன் பட்டத்தை இழந்துள்ள நிலையில், 9-வது சீசன் ஆசிய கபடி சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிக்கு முன்னேறியுள்ளது. இதன்மூலம் இந்தியா 8-வது முறையாக ஆசிய கபடி சாம்பியன்ஷிப் கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஷஸ் டெஸ்ட்: நட்சத்திர பந்துவீச்சாளர்களை  பெஞ்சில் வைத்து அடிமேல் அடிவாங்கும் இங்கிலாந்து

பாரம்பரியமிக்க ஆஷஸ் தொடரின் 73-வது சீசன் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி புதனன்று தொடங்கியது. 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்து மொயின் அலி யை மட்டும் பெஞ்சில் அமர வைத்து, ஜோஸ் டோங்குவை களமிறக்கியது. ஜோஸ் டோங்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினாலும், ஒருநாள் தொடரை போல ரன்களை வாரி வழங்கினார். மற்ற பந்துவீச்சாளர்கள் வழக்கம் போல ரன் வழங்கும் வள்ளல்களாக மாறிய நிலையில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 339 ரன்கள் குவித்தது.  கடந்த முதல் போட்டியில் ஆஸ்திரே லிய அணி ரன் குவித்ததை ஒரு எச்சரி க்கையாக கொள்ளாமலும், அணியில் மாற்று பந்துவீச்சாளர்களை கள மிறக்காமலும் 2-வது டெஸ்ட் போட்டி யில் மீண்டும் அதே வீரர்களை களமிறக்கி அடிமேல் அடி வாங்கிக் கொண்டு இருக்கிறது இங்கிலாந்து.  இவர்கள் பெஞ்சில் ஏன்? ஆஷஸ் இங்கிலாந்து அணி பட்டிய லில் ஆண்டர்சன், பிராட், ராபின்சன், வோக்ஸ், மார்க் வுட் ஆகிய பிரபல நட்சத்திர பந்துவீச்சாளார்கள் உள்ள னர். இதில் ஆண்டர்சன், பிராட், ராபின்சன் மட்டுமே முதல் மட்டும் 2-வது டெஸ்ட் போட்டியிலும் விளையாடி வரு கின்றனர். வோக்ஸ், மார்க் வுட் 2-வது போட்டியிலும் களமிறக்கவில்லை. முதல் டெஸ்ட் போட்டியில் விளை யாடிய மொயின் லீக் நீக்கப்பட்டு 2-ஆம்  தர பந்துவீச்சாளரான ஜோஸ் டோங்கு வை களமிறக்கியுள்ளது. வோக்ஸ், மார்க் வுட் ஆகியோருக்கு போது மான அனுபவம், திறமை இருந்தும் அவர்களை ஆடும் லெவனில் சேர்க்கா தது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதன் விளைவுதான் 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஒருநாள் போட்டி போல ருத்ர தாண்டவம் ஆடி ஆஸ்திரேலிய அணி 339 ரன்கள் குவித்துள்ளது.