games

img

காலிறுதி போட்டி அறிவித்து மாட்டிக்கொண்ட கும்பல்

டிஎன்பிஎல்
இன்றைய ஆட்டம் (18வது லீக்)
திருப்பூர் - சேலம்
இடம் : கோவை
நேரம் : இரவு 7:15 மணி

குஜராத்தைச் சேர்ந்த சோயப் தாவ்டா மற்றும் ஆசிப் முகமது ஆகியோர் (இருவரும் ரஷ்யாவில் பணி புரிந்தவர்கள்) போலி ஐபிஎல் தொடர் மூலம் சூதாட்டம் நடத்தி பணம் சம்பாதிக்க பெரிய திட்டம் ஒன்றை தீட்டியிருந்தனர். இவர்களது திட்ட வலையில் குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள மொலிபூர் கிராமத்தைச் சேர்ந்த 21  தொழிலாளர்கள் விழுந்தார்கள். விவ சாயிகள், வேலையில்லாத 21 பேரைக் கொண்டு ஐபிஎல் அணிகள் உருவாகின. இதில் 21 பேர் வீரர்கள்.  ஒரிஜினல் ஐபிஎல் தொடர் நிறைவு பெற்ற தினத்திலிருந்து அடுத்த மூன்றாவது வாரத்தில் போலி ஐபிஎல் போட்டி தொடங்கியிருக்கிறது.

சென்னை, மும்பை, குஜராத் என அணிகள் பிரிக்கப்பட்டு அந்த அணி களின் சீருடையில் 21 வீரர்கள் விளை யாட வைக்கப்பட்டார்கள். ரஷ்ய சூதாட்டக்காரர்களிடம் பணம் பறிக்க இதுதான் ஐபிஎல் போட்டி, இவர்கள் தான் ஐபிஎல் வீரர்கள் எனச் சொல்லி போட்டியை யூடியூபில் நேரலையாக வும் ஒளிபரப்பினார்கள். ரஷ்ய சூதாட்டக் கும்பல்கள் இதனை நம்பி சூதாட்டத்தில் பிசியாகிவிட்டனர். தனக்கு தானே சூன்யம் வைத்துக் கொண்ட கதையாக நன்றாக, பரபரப் பாக சென்று கொண்டிருந்த போலி ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு  பதிலாக காலிறுதி சுற்று என புதிய சுற்றை உருவாக்கி, அதற்கான அறி விப்பை இணையத்தில் வெளியிட்ட னர். “என்னது ஐபிஎல்  தொடரில் காலிறுதியா” என  சந்தேகமடைந்த போலீசார் மறைமுக விசாரணை யில் குதித்து போலி ஐபிஎல் குழுவை மடக்கிப் பிடித்தனர். கிரிக்கெட்  வீரர்களாக நடித்த 21 பேரிடமும், பண்ணை உரிமையாளரிடமும் காவல்துறை விசாரணை செய்து வருகிறது.

அப்பாவி தொழிலாளர்கள் 

கிரிக்கெட் வீரர்களாக நடித்த 21 பேர் தங்களை வைத்து சூதாட்டம் நடக்கிறது என்பதை அறியாமலேயே இந்த வேலையைச் செய்திருக்கிறார்கள். ஒருநாளைக்கு ரூ. 400 தருவதாகச் சொன்னார்கள். எங்கள் ஊரில் பண்ணையில் வேலை செய்தால் ஒருநாளைக்கு ரூ. 300 தான் கிடைக்கும். எனவே இந்த வேலைக்கு ஒப்புக்கொண்டோம் என்று தொழிலாளர்கள் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ஏற்பாடுகள் பிரமாதம்

போலீசாருக்கு, உள்ளூர் மக்களுக்கு போக்கு காட்டி ஒரு பண்ணையில் யாருக்கும் தெரியாமல் கிரிக்கெட் மைதானங்கள் போன்று அனைத்தையும் அமைத்து 21 தொழிலாளர்கள் விளையாடிய கிரிக்கெட் ஆட்டங்கள் விளக்கொளியில் நடத்தப்பட்டன. அனைவருக்கும் ஐபிஎல் அணிகளின் டி-ஷர்ட்கள், போலி ஹர்ஷா போக்ளேவின் வர்ணனை, ஆட்டங்கள் உடனடியாக பதிவேற்றப்பட்டு யூடியூபில் நேரலை என அனைத்தும் கட்சிதமாக உருவாக்கியுள்ளனர் போலி ஐபிஎல் தொடரின் ஒருங்கிணைப்பாளர்கள் சோயப்பும் ஆசிப் முகமதும்.

எல்லாம் நகைச்சுவை தான்... 

ஒரு அணியில் விளையாட 22 பேர் கட்டாயம் தேவை. ஆனால் வெறும் 21 வீரர்களை வைத்து தொடரை நடத்தியுள்ளனர். கிரிக்கெட் பற்றி சரிவர அறியாத ரஷ்யர்களை ஏமாற்ற நினைத்து சாதித்து காட்டினாலும், ஐபிஎல் தொடரில் காலிறுதி சுற்று இல்லை என்பதை அறியாமல் காலிறுதி  போட்டியை நடத்த தயாராக இருந்தது தான் மிகப்பெரிய நகைச்சுவை செய்தி யாக உள்ளது. சூதாட்டத்தை பற்றி அறிந்த கும்பல் ஐபிஎல் தொடரின் முழு  விதியையும் அறிந்திருந்தால் இறுதி வரை நன்றாக சம்பாதித்து இருப்பார்கள். ஆனால் காலிறுதி என்ற ஒரே ஆட்டமுறை யால் ரூ.3 லட்சம் வரை சம்பாதித்து மாட்டிக்கொண்டனர்.