games

img

இந்திய வீரர்கள் பற்றி வித்தியாசமான புகார் தெரிவித்த ஆஸி., வீரர்

கடந்த 2021-ஆம் ஆண்டு இந்திய அணி பார்டர்- கவாஸ்கர் கோப்பையை (டெஸ்ட்) கைப்பற்றி வர லாற்று சாதனை படைத்தது. இந்த வெற்றியை பொறுத்துக்கொள்ளாத ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள், முன்னாள் வீரர்கள், மீடியாக்கள் இந்திய அணி வீரர்கள் மீது பல்வேறு சர்ச்சை கருத்துக்களை தெரிவித்தது. தொடர் முடிந்து ஒரு வருட காலம் ஆகிவிட்ட நிலையில், ஆவணப்படம் மூலம் இந்திய அணியினர் மீது சர்ச்சை கருத்து தெரிவித்து தற்போது மீண்டும் பிரச்சனையை கிளப்பிவிட்டுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் (கேப்டன்) டிம் பெயின்.  ஆவணப்பட இயக்குனர் நீரஜ் பாண்டே பார்டர்- கவாஸ்கர் கோப் பையை ஆவணப்படமாக (பண்டோன் மெயின் தா தும்) எடுத்து வூட் (VOOT) ஓடிடி தளத்தில் வெள்ளியன்று வெளியிட்டார். இந்த ஆவணப்படத் தில் டிம் பெயின் கூறிய கருத்து சர்ச்சை யாக வெடித்துள்ளது. அதில்,”4-5 இந்திய வீரர்களால் டெஸ்ட் தொடரே ஆபத்துக்குள்ளா னது. ஒரு கப் நந்தோ சிக்கன், சிப்ஸ் அல்லது வேறு எதோ ஒன்றுக்காக இப்படி சுயநலமாக (கொரோனா பாது காப்பு வளையத்தை விட்டு ஹோட்டலு க்கு சென்றது) அவர்கள் செயல்பட்டது தவறு. எங்கள் அணியினர் கிறிஸ்து மஸ் கொண்டாட்டத்தை குடும்பத்து டன் கொண்டாடாமல் கிரிக்கெட் விளை யாட வந்திருந்தனர். அந்த தியாகம் எதி ரணிக்கும் இருக்க வேண்டும். பொறுப் பில்லாமல் கொரோனா விதிகளை மீறி இந்திய வீரர்கள் செயல்பட்டது எங்களது அணிக்கு எரிச்சலாக இருந்தது” எனக் கூறியுள்ளார்.

இந்த புகார் டெஸ்ட் தொடர் நடக்கும் போதே கூறப்பட்டது. ரோகித் சர்மா, ரிஷப் பந்த், சுப்மன்கில், பிரித்வி ஷா, நவ்தீப் சைனி ஆகியோர் கொரோனா விதிகளை மீறி ஹோட்டலில் இருக்கும் வீடியோ ஒன்றும் வெளியானது. ஆனால் இந்திய, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் கண்டு கொள்ளவில்லை. ஆனால்  பெயின் தான் தற்பொழுது சிக்கனுக்காக, சிப்ஸுக்காக என உணவு முறையில் தொடர்புபடுத்தி சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளார்.

உணவு உண்ணும் விவகாரத்தை பற்றி கருத்து கூறுவது சரியா?

விளையாட்டு உலகில் மட்டு மல்ல எந்த துறையாக இருந் தாலும் தனி மனிதனின் உணவு முறையில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது. இந்திய அணி வீரர்கள் கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்து வெளியேறி யது தவறு தான் என்றாலும் டிம் பெயின் சிக்கன், சிப்ஸுக்காக என்று கீழ்த்தரமாக விமர்சித்துள்ளார். இது முற்றிலும் தவறானது. இது  பற்றி இந்திய கிரிக்கெட் வாரியம் இன்னும் கருத்து தெரிவிக்க வில்லை. கட்டாயம் கண்டனம் தெரி விக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.