games

img

விளையாட்டு

கிளப் உலகக்கோப்பை கால்பந்து 2025 போர்டோ - அல் அஹ்லி கடும் போராட்டம்

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தால் நடத்தப்படும் கிளப் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 21ஆவது சீசன் அமெரிக்காவில் ஜூன் 14ஆம் தேதி தொடங்கி யது. தற்போது இந்த தொடரில் லீக் ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை நடைபெற்ற “குரூப் ஏ” பிரிவின் லீக் ஆட்டத்தில் போர்ட்டோ (போர்ச்சுக்கல்) - அல் அஹ்லி (எகிப்து) அணிகள் மோதின.  இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோலடிக்க ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 4-4 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்ததால் ஆட்டம் டிராவில் நிறைவடைந்தது. இரு அணிகளும் மாறி, மாறி கோல் மழை பொழிந்ததாலும், ரசிகர்களின் ஆரவாரத்தாலும் அமெரிக்காவின் மெட்லைப் மைதானம் விழாக்கோலம் பூண்டது. பிஎஸ்ஜி அபாரம் “குரூப் பி” ஆட்டத்தில் பிரான்ஸ் நாட்டின் முன்னணி கால்பந்து அணியான பாரீஸ் ஜெயிண்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணி, அமெரிக்காவின் சியாட்டில் சவுண்டர்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணி 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. அதே போன்று “குரூப் பி” பிரிவின் மற்றொரு லீக் ஆட்டத்தில் கிளப் கால்பந்து உலகின் நட்சத்திர அணி களில் ஒன்றான அதெல்டிகோ மாட்ரிட் அணி (ஸ்பெயின்), பிரேசில் கிளப் அணியான போடாபோகோவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டது. இன்டர் மியாமி டிரா “குரூப் ஏ” பிரிவு லீக் ஆட்டத்தில் மெஸ்ஸியின் இன்டர் மியாமி (அமெரிக்கா) - பால்மெய்ராஸ் (பிரேசில்) அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் நிறைவடைந்தது.

பாம்புடன் கிரிக்கெட் போட்டியை காண வந்த ரசிகர் அனுமதி அளித்தது எப்படி?

டெஸ்ட், ஒருநாள், டி-20 என மூன்றுவிதமான போட்டிகளில் பங்கேற்க வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கை நாட்டிற்கு சென்றுள்ளது. தற்போது இரு அணிகளும் 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் நிறைவடைந்தது. 2ஆவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை அன்று நடைபெறுகிறது. இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் நடந்த ஒரே ஒரு சம்பவம் இன்று வரை சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் உள்ளது. அந்த சம்பவம் யாதெனில் இலங்கை கிரிக்கெட் ரசிகர் ஒருவர் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியை காண பாம்புடன் வந்து, காலே மைதானத்தை கதி கலங்க வைத்துள்ளார். ஆனால் எப்படி மைதான அதிகாரிகள் அவரை  பாம்புடன் அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. பாம்புடன் வந்தவர்,  பாம்பை வைத்து வித்தை காட்டும் மிகவும் ஏழ்மையான நபர் ஆவார்.  ஆனாலும் கிரிக்கெட் மீதான அதீத ஆர்வத்தால் ஆயிரக்கணக்கில் செலவு செய்து டிக்கெட் வாங்கி, இலங்கை - வங்கதேசம் டெஸ்ட் போட்டியை காண வந்துள்ளார்.

டிஎன்பிஎல் இன்றைய ஆட்டம்

திருச்சி - மதுரை

நேரம் : இரவு 7:15 மணி இடம் : இந்தியா சிமெண்ட்ஸ் மைதானம், திருநெல்வேலி சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)