games

img

விளையாட்டு...

கவாஸ்கர் பேட்டிக்கு மிக மோசமாக சிறு பிள்ளைத் தனமாக பதில் அளித்த பிசிசிஐ அதிகாரி

சர்வாதிகாரப் போக்குடன் பிசிசிஐ

ரஞ்சி கோப்பை தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மும்பை வீரரும், ஐபிஎல் தொடரில் தில்லி அணிக்காக விளையாடி வரும் 25 வயதுமிக்க இளம் வீரரான சர்பிராஸ் கானை இந்திய அணியில் தேர்வு செய்யாமல் பிசிசிஐ அலட்சியம் செய்து வருகிறது.

கவாஸ்கர்

சமீபத்தில் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் சர்பிராஸ் கான் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில், அவரது பெயர் வீரர்கள் பட்டியலில் இல்லை.  இதுதொடர்பாக முன்னாள் வீரர் கவாஸ்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்தார். அதில்,”சர்பிராஸ் கான்  கடந்த மூன்று ரஞ்சிக்கோப்பை சீசன்களிலும் 100 சராசரிக்கு மேல் ரன்களை எடுத்துள்ளார். இந்திய அணியில் இடம்பெறு வதற்கு ஒரு இளம் வீரருக்கு இந்த தகுதி போதாதா? மாறாக ஒரு வீரர் வேறு என்ன தான் செய்ய வேண்டும். ஒருவேளை அவர் லெவனில் இல்லாமல் போனாலும், நீங்கள் அவரை  அணியிலாவது தேர்வு செய்திருக்க வேண்டும். உருவத்தை  பார்க்காதீர்கள். அவர் பேட் செய்யும் போது வெளியில் அமர்ந்து விளையாடவில்லை, களத்திற்கு வந்துதான் விளை யாடினார். உங்களுக்கு ஒல்லியான வீரர்கள்தான் வேண்டு மென்றால், பேட்டையும் பந்தையும் தூக்கி வீசிவிட்டு பேஷன் ஷோவுக்கு செல்லுங்கள்” என்று காட்டமாக விமர்சித்திருந் தார்.

நாங்கள் என்ன முட்டாள்களா?

கவாஸ்கரின் கருத்தை பொறுத்துக்கொள்ள முடியாத பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ நிறுவனத்திடம், “சர்பிராஸ் கான் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாததற்கு அவரு டைய கிரிக்கெட் திறன் காரணம் கிடையாது. களத்திலும், களத்திற்கு வெளியே அவரது செயல்பாடுகள் முறையாக இல்லை. போட்டியின் பொழுது ஆக்ரோஷமாக அவர்  கொண்டாடும் விதத்தை நாங்கள் கவனித்து வருகிறோம். சற்று கட்டுப்பாடுடன் நடந்து கொள்வதே சர்பிராஸ் கானுக்கு நன்மை கொடுக்கும். அவரது உடல் வலிமையும் சர்வதேச தரத்தில் இல்லை. அவர் சற்று எடை குறைக்க வேண்டும். தொடர்ச்சியான ரஞ்சி தொடர் சீசன்களில் சிறப்பாக விளை யாடி வருபவரை இந்திய அணிக்கு தேர்வு செய்யாமல் இருக்க நாங்கள் என்ன முட்டாள்களா?  சர்பிராஸ் கான்  தனது தந்தையும் பயிற்சியாளருமான நௌஷாத் கானுடன் இணைந்து வரும் காலங்களில் பணியாற்றுவார் என்று நம்புகிறோம்” என கூறியுள்ளார்.

கருத்து சொல்ல கூட உரிமை இல்லையா?

கவாஸ்கர் இந்திய கிரிக்கெட் அணியை உரமிட்டு வளர்த்த  முன்னாள் வீரர்களில் ஒருவர். அதாவது இந்திய நாடும் கிரிக்கெட் விளையாட முடியும் என தனது ஆட்டத்திறன் மூலம் ஒரு வழிகாட்டியாக இருந்தவர். அவரது அனுபவத் திற்கு ஏற்ப இந்திய அணியின் நலனுக்கு சர்பிராஸ் மூலம் தனது கருத்தை கூறினார். ஒரு சீனியர் வீரர் கருத்துக் கூறினால், கருத்தை உள்வாங்கி அடுத்த கட்ட தொடர் களில் சீனியர் வீரரின் முன்மொழிவு வீரரை தேர்வு செய்வதை பற்றி ஆலோசிக்கலாம். இல்லை என்றால் போதுமான அளவு காரண விளக்கம் அளிக்கலாம். ஆனால் கவாஸ்கர் கருத் திற்கு பிசிசிஐ அதிகாரி, “சாதத்தில் உப்பு இல்லை, சாம்பாரில் காரம் இல்லை” என்பது போல துள்ளிக் குதித்து பதிலடி விளக்கம் அளித்துள்ளார். இது முறையல்ல. பிசிசிஐ என்பது யாருடைய தனிப்பட்ட சொத்து கிடையாது. நன்றாக விளை யாடும் வீரர்களை தேர்வு செய்வது தான் பிசிசிஐ வேலை என்பதை உணராமல் சர்வாதிகாரப் போக்குடன் செயல்படுவது மிகவும் மோசமானது. 

பழிவாங்கும் நடவடிக்கையாக கூட இருக்கலாம்... 

போட்டியின் போது சர்பிராஸ் ஆக்ரோஷ மாக கொண்டாடுகிறார் என பிசிசிஐ அதிகாரி கூறியிருப்பதன் காரணம் என்னவென்றால், கடந்த ஜனவரி மாதம் நடந்த தில்லி அணிக்கு எதி ரான போட்டியின் போது சதம் விளாசிய சர்பிராஸ் கான், அப்போதைய தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மாவை நோக்கி “கபடி ஸ்டைலில்” கைகளை நீட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் விமர்சனத்துக்குள் ளானார். ஒருவேளை இந்த சம்பவத்தால் திறமை இருந் தும் வேண்டுமென்றே சர்பிராஸ் கான் பழிவாங்கப்படு கிறாரா? என்ற சந்தேகமும் கிளம்பியுள்ளது.