ராஜஸ்தான் அணியில் எப்பொழு தும் துறுதுறுவென ஒரு வீரர் பம்பரம் போல சுழன்று கொண்டே இருப்பார். 5-வது ஜெர்சி எண் கொண்ட அந்த வீரரை கண்டாலே ஐபிஎல் அணிகள் சற்று மாறுபட்ட பார்வையில் பார்க்கின்றன. எதிரணி பேட்டர்கள் முதலில் ரியான் எங்கே இருக் கிறார் என்று தான் பார்ப்பார்கள். அந்தள வுக்கு தன்னுடைய திறமையினால் ஐபிஎல் எதிரணிகளை மிரட்டி வருகிறார் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ரியான் பாரக் (20).
ரியானின் சிறப்புகள்
எந்த வரிசையில் இறங்கினாலும் எடுத்த தும் அதிரடி தான். “விளையாடினால் நன்றாக ரன் குவிப்பேன்” இல்லையென்றால் “பெவி லியனில் ஓய்வு எடுப்பேன்” என்பது தான் இவரது கொள்கை. இதற்காகவே ராஜஸ்தான் அணி நிர்வாகம் இவரை மிடில் ஆர்டரின் கடைசி வீரராக அதாவது ஆட்டத்தின் இறுதி ஓவர்களில் ரன் குவிப்பிற்கு பயன்படுத்திக் கொள்கிறது. நடப்பு சீசனில் ரியான் (6 இன்னிங்ஸ் - 104 ரன்கள்) மிக குறைந்த அளவு ரன்களை குவித்தாலும், குறைந்த பந்து களில் அதிக ரன்களை குவித்து இறுதி ஓவர் களில் ராஜஸ்தான் அணிக்கு கூடுதல் ரன் களை பெற்றுத் தந்துள்ளார். பேட்டிங்கில் இப்படி என்றால் பீல்டிங்கில் படு சுறுசுறுப்பாக சுழலுவார். பந்து எவ்வளவு வேகம், எவ்வளவு தூரமாக வந்தாலும் ஆஸ்திரேலிய நாட்டினரைப் போல பாய்ந்து விடுவார். கேட்ச் அசால்ட்டாக தனி ஸ்டைலில் பிடிப்பார். அந்த ஸ்டைலே தனி ரகம் தான். இது ஒருபுறமிருக்க கேட்ச் பிடித்தால் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர்கள் போல சில நேரங்களில் நடனமும் ஆட ஆரம்பித்து விடுவார்.
சண்டைக்கு முதல் ஆள்
சீண்டினால் வெறுமன நிற்க மாட்டார். சீனியர், பெரிய ஸ்டார் என யாரையும் பிரித்து பார்த்து சண்டை போடுவதில்லை. மல்லுக் கட்ட தயாராக எகிறுவார். செவ்வாயன்று நடை பெற்ற 39-வது லீக் ஆட்டத்தில் இறுதிக்கட்ட அதிரடி மூலம் 56 ரன்கள் குவித்து ஆட்ட மிழக்காமல் இருந்தார். இவரது பேட்டிங் செயல்பாட்டை கண்டு பெங்களூரு பந்து வீச்சாளர்கள் சிராஜ் மற்றும் ஹர்ஷல் மோத லில் ஈடுபட்டனர். தனி ஒருவராய் இருவரையும் மோதலுக்கு அழைத்து மல்லுக்கட்ட தயாராக இருந்தார். மற்ற வீரர்கள் ரியானை சமாதானப்படுத்த பெரும்பாடாகிவிட்டது.
நோ கேப்
பீல்டிங்கின் போது கேப் (தொப்பி) அணிவதில்லை. பெரும்பாலான நேரங்களில் பேட்டிங்கின் போது ஹெல்மெட் அணிய மாட்டார். சுழற்பந்துவீச்சாளர் என்றாலும் ரியானை பந்துவீச ராஜஸ்தான் அணி நிர்வாகம் விரும்பவில்லை. அவரை பேட்டிங், பீல்டிங்கில் மட்டும் தனியாய் கவனித்து வருகிறது. இவரது வயது (20) மற்றும் ரத்த துடிப்பிற்கு ஏற்ப ராஜஸ்தான் அணி நிர்வாகம் ரியானை செல்லமாக வளர்த்து வருகிறது. ரியானும் தனது அணியின் வளர்ப்பை அப்படியே உள்வாங்கி கடந்த சீசனை போல வே நடப்பு சீசனிலும் அசத்தி வருகிறார். வெறும் 20 வயது.... அனைத்து துறை யிலும் அசத்தலான செயல்பாடு... பிரச்சனை இல்லாத பார்ம் திறன்... என பல்வேறு சிறப்பான அம்சங்கள் இருப்பதால் ரியா னுக்கு விரைவில் இந்திய தேசிய அணியில் இடம் கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல்
இன்றைய ஆட்டங்கள்
தில்லி - கொல்கத்தா (41வது லீக்)
இடம்: வான்கடே, மும்பை / நேரம் : இரவு 7:30 மணி