games

img

விளையாட்டு...

பீலே பெயருக்கு விளக்க அகராதி

கால்பந்து உலகின் பிதா மகன் பீலே பிரேசில் அணிக்காக 1957 முதல் 1971 வரை விளை யாடி, 92 போட்டிகளில் 77 கோல்களு டன் 3 உலகக்கோப்பையை பெற்று வரலாறு படைத்தவர். இதுபோக அனைத்து விதமான கால்பந்து போட்டிகளிலும் 1,281 கோல்களை அடித்துள்ள பீலே, கடந்த ஆண்டு டிசம்பரில் தனது 82-வது வயதில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட பக்க வாத பாதிப்பால் காலமானார்.  இந்நிலையில், பீலேவின் பெயரை  போர்ச்சுகீஸ் (Portuguese) மொழி  அகராதியில் பொருள்பட பெயரடை யாக சேர்க்கப்பட்டுள்ளது. பீலே பிறந்த மண்ணான பிரேசில் நாட்டில் இருந்து வெளிவரும் மைக்கலிஸ் போர் ச்சுகீஸ் (Michaelis Portuguese) அக ராதியில் பீலே என்றால் “அபூர்வமான, ஒப்பற்ற, தனித்துவமான” என மூன்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.  மைக்கலிஸ் போர்ச்சுகீஸ் அகராதி யில் மொத்தம் 1,67,000 சொற்கள் அடங்கியுள்ள இந்த பட்டியலில் பீலேவின் பெயரும் விளக்க குறிப்பாக இணைந்துள்ளது. தற்போது மைக்கலிஸ் போர்ச்சுகீஸ் ஆன்லைன் அகராதி தொகுப்பில் மட்டுமே “பீலே” என்ற சொல்லின் விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது. வரும் நாட்களில் அச்சு பிரதி யில் இடம்பெற திட்டமிடப்பட்டுள்ள தாக செய்திகள் வெளியாகியுள்ளன. உலகின் முக்கிய மொழிகளில் ஒன்றான போர்ச்சுகீசிய மொழி 10 கோடி மக்களால் (265 மில்லியன்) பேசப்படும் மொழியாகும். வரலாற்று தொன்மைவாய்ந்த இந்த மொழியில் விளையாட்டு வீரரின் பெயர் (“பீலே”) அர்த்தமுள்ள சொல்லாக மாறி யுள்ளது கூடுதல் வரலாற்று நிகழ்வாக முளைத்துள்ளது.

ஐபிஎல் - 2023

இங்கிலாந்து அணி வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.50 கோடி
பேரம் பேசும் ஐபிஎல் அணிகள்?

ஒவ்வொரு சீசன் ஐபிஎல் தொடரில் இங்கிலாந்து அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். நடப்பு சீசனில் மொயின் அலி (சென்னை), ஜேசன் ராய் (கொல்கத்தா), ஜோஸ் பட்லர் (ராஜஸ்தான்), சாம் கர்ரன் (பஞ்சாப்)  உள்ளிட்ட இங்கிலாந்து அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி வரும் நிலையில், அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.50 கோடி வழங்க ஐபிஎல் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஐபிஎல் அணிகள் வழங்குவதாக கூறப்படும் தொகையானது இங்கிலாந்து கிரிக்கெட் அணி மற்றும் கவுன்டி (இங்கிலாந்து உள்ளூர்) அணிகளை விட அதிகமாகும். பேரம் பேசப்படுகிறதா? கால்பந்து விளையாட்டில் உள்ளது போலவே வீரர்கள், லீக் அணிகளுடன் ஆண்டு ஒப்பந்த முறையில் பணியாற்றுவது தொடர்பாக ஐபிஎல் அணிகள் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதாவது இங்கிலாந்தை சேர்ந்த 6 முன்னணி வீரர்களை சில ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் சுமார் ரூ.50 கோடி வரை ஊதியமாக பேரம் பேசி, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், இங்கிலாந்து கவுண்டி அணி நிர்வாகம் ஆகியவற்றை விடுத்து தங்களுடன் இணைந்து முழுமையாக பணியாற்றுவது தொடர்பாக வீரர்களுடன் தொடக்க நிலை பேச்சு நடத்தப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சம்மதிக்க வேண்டும். சம்மதிக்க 75% வாய்ப்புகள் குறைவுதான்.

இன்றைய ஆட்டம்

பஞ்சாப் - லக்னோ
இடம் : பிந்த்ரா மைதானம், மொஹாலி
நேரம் :  இரவு 7:30 மணி

சேனல் : தொலைக்காட்சி - ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஒடிடி - ஜியோ சினிமா