games

img

பிசிசிஐ-க்கு வலுக்கும் கண்டனம்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி தற்போது டி-20 தொடரில் விளை யாடி வருகிறது. 3 போட்டிகளை கொண்ட டி-20 தொடரின் முதல் 2 ஆட்டத்தில் இரு அணிகளும் ஆளுக்கொரு வெற்றி யுடன் 1-1 என்ற கணக்கில் தொடரில் சமநிலையில் உள்ள  நிலையில், ஞாயிறன்று நடைபெற்ற 2-வது டி-20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.  உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே சரிவர விளையாட முடியாமல் திணறினர். பிட்ச் பகுதி 100%வித்தியாசமான உயிரோட்டமாக இருந்ததால் வேகம், சூழல் என எதையும் கணிக்க முடியாமல் இரு அணி பேட்ஸ்மேன்களும் திக்கு திணறினர். போட்டி தொடங்கிய பொழுது மைதா னத்தின் உறுதி தன்மை படுமோசமாக இருந்தது. இதன் காரணமாகவே அதிரடிக்கு பெயர் பெற்ற நியூசிலாந்து அணி இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் 99 ரன்களுக்குசுருண்டது.

120 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியும் நியூசிலாந்தின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. கடுமையான போராட்டத்திற்கு பின்பு இந்திய அணி 19.5 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டிப்பிடித்து வெற்றி பெற்றது. லக்னோ ஆடுகளத்தின் தன்மை குறித்து இந்திய கிரிக்கெட் கேப்டன் ஹர்திக், நியூஸிலாந்து வீரர்கள் என இரு  அணியினரும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.  மேலும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் தரமில்லா இந்திய மைதானத்தில் உயிரோட்ட ஆடுகளமா? லக்னோ  மைதானத்தை சர்வதேச போட்டிக்கு அனுமதி அளித்தது எப்படி? என்ற பல்வேறு கேள்விகளுடன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.