games

img

விளையாட்டு...

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் ஒரே நாளில் இந்தியாவுக்கு 2 தங்கம்

துருக்கி நாட்டின் முக்கிய நகரான அந்தாலியில் நடை பெற்ற உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவைச் சேர்ந்த ஜோதி சுரேகா (ஆந்திரா) தனி நபர் மற்றும் கலப்பு இரட்டையர் என பிரிவுகளில்  தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார்.  மகளிர் தனிநபர் பிரிவு இறுதிப்போட்டியில் ஜோதி சுரேகா,  முன்னாள் உலக சாம்பியனான கொலம்பியாவின் சாரா லோபசை 149-146 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து தனது முதல் தனிநபர் உலகக்கோப்பை தங்கத்தை கைப்பற்றினார்.  இதேபோல, கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா சார்பில் பிரவீன் -  ஜோதி சுரேகா ஜோடி, சீன தைபேவின்  சென் யீ - சென் சியே ஜோடியை 159-154 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது. இதன்மூலம் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா ஒரே நாளில் 2 தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

ஜியோ சினிமாவில் இந்திக்கு மட்டும் முன்னுரிமை

ஐபிஎல் - 2023

நடப்பு சீசன் ஐபிஎல் தொடரின் ஓடிடி பிரிவை ஜியோ சினிமா இலவசமாக ஆங்கிலம், தமிழ், மலையாளம், தெலுங்கு, பெங்காலி, இந்தி என மொத்தம் 12 மொழிகளில் ஒளிபரப்பு செய்கிறது. 12 மொழிகளில் ஒளி பரப்பு செய்தாலும் ஜியோ சினிமாவின் முதல் சாய்ஸ் இந்தி மொழியாக உள்ளது. அதாவது ஜியோ சினிமாவின் நேரடி ஒளிபரப்பு ஸ்க்ரீனில் முதலில் இந்தி மொழியில்தான் ஸ்கோர் கார்டு, கமெண்டரி ஒளிபரப்பு ஆகும். இந்தி சாராத வேறு மாநிலத்தவர்கள் செட்டிங்ஸ் (அமைப்புகள்) சென்று மொழியை மாற்றி நேரடி ஒளிபரப்பை காணும் சூழ்நிலை உள்ளது. வேறு மொழிக்கு மாற்றுவது கடினம் மற்ற மொழிகளை மாற்ற கீழே சாய்ஸ் கொடுத்தாலும், அந்த சாய்ஸ் ஸ்க்ரீனில் வெறும் 5 வினாடிகள்தான் இருக்கும். அதனை தவறவிட்டால் செட்டிங்ஸ் சென்று மாற்ற வேண்டும் என்ற சிக்கல் உள்ளது. செட்டிங்ஸில் தேடுவதற்குள் பெரும்பாடு ஆகிவிடுகிறது. முக்கியமாக ஸ்மார்ட் டிவிகளில் ரிமோட் மூலம் தேடு வது, செட்டிங்ஸ் பாயிண்டுகளை தொடு வது சற்று சிக்கலானது.  அதிக விருப்பம் ஆங்கிலம் பொதுவாக விளையாட்டு உலகில் ஆங்கிலம்தான் அதிகாரப்பூர்வ மொழியாக உள்ளது. காரணம் விளையாட்டு மொழிகள் அனைத்தும் ஆங்கிலத்தில்தான் புரியும். உலகின் மற்ற மொழிகள், இந்திய மொழிகளில் விளையாட்டு விதிகள், விளையாட்டு பேச்சுக்கள் புரியாது. புரியும்படி சொன்னால் விளையாட்டு வீரர்களின் பெயர்கள் கூட குளறுபடியுடன்தான் இந்திய மொழிகளில் படிக்க முடியும். இப்படி பல்வேறு சிக்கல் உள்ள நிலையில், அனைத்து மொழிகளில் ஒளிபரப்பு என்ற பெயரில் ஜியோ சினிமா இந்திக்கு மட்டும் முன்னுரிமை என்பது மிகவும் தவறானது ஆகும்.

அர்ஷதீப் சிங் மிரட்டல் பந்துவீச்சால் அடுத்தடுத்து 2 முறை உடைந்த ஸ்டெம்ப்
ஒரே ஓவரில் ரூ.48 லட்சம் இழப்பு

சனியன்று நடைபெற்ற ஐபிஎல் தொட ரின் 31-வது லீக் ஆட்டத்தில் மும்பை  அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் அணி. இந்த ஆட்டத்தின் கடைசி ஓவரில் மும்பை அணிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை பஞ்சாப் அணியின் அர்ஷதீப் சிங் வீசினார். அர்ஷதீப் சிங் யார்க்கரை சமாளிக்க முடியாமல் மும்பை அணி 2 விக்கெட்களை இழந்து வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. முக்கியமாக மும்பை வீரர்கள் திலக் வர்மா, நேஹால் வேத்ரா ஸ்டம்ப்புகள் உடைந்து பறக்கும் அளவிற்கு போல்டானார்கள்.  ரூ.48 லட்சம் இழப்பு ஒரு ஆட்டத்திற்கு பயன்படும் ஒரு செட் (3) ஸ்டெம்ப் ரூ.24 லட்சம் ஆகும். சாதாரண மரக்கட்டைக்கு இவ்வளவு என்று நினைக்க வேண்டாம். மைக், ஆடியோகிராம் உள்ளிட்ட சென்சார்கள் பொறுத்தப்பட்டுள்ளதால் ஒரு ஜோடி ஸ்டெம்ப் ரூ.24 லட்சம் விலையில் வாங்கப் படுகிறது. அப்படியானால் ஒரு ஆட்டத்திற்கு ஸ்டெம்ப் தேவை (2 செட்) மட்டும் ரூ.48 லட்சம் செலவாகிறது. ஸ்டெம்ப் விலையே இப்படி இருக்கையில் மும்பை அணிக்கெதிரான ஆட்டத்தின் பொழுது பஞ்சாப் வீரர் அர்ஷதீப் சிங் அடுத்தடுத்து 2 முறை உடைத்து ஒரே ஓவ ரில் ரூ.48 லட்சம் இழப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இன்றைய ஆட்டம்

தில்லி - ஹைதராபாத் (34)
இடம் : ராஜீவ் காந்தி மைதானம், ஹைதராபாத்
நேரம் :  இரவு 7:30 மணி