இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சஸ்பெண்ட்
பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலி யல் புகார் அளித்தனர். பிரிஜ் பூஷண் சொந்த கட்சி எம்பி என்பதால் அவரை காப்பாற்றுவதற்காக நடவடிக்கை எடுக்காமல் ஒன்றிய அரசு காலம் தாழ்த்தியது. இதனால் மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். ஒன்றிய பாஜக அரசின் கட்டுப் பாட்டில் இருக்கும் தில்லி காவல்துறை மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் மீது தடியடி நடத்தி போராட்டத்தை கலைத்தது. மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக வும், பாலியல் புகார் காரணமாக இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரான பிரிஜ் பூஷண் பதவி நீக்கம் செய்யப்பட்ட தாலும் 45 நாள்களுக்குள் அதாவது மே 30-க்குள் 15 பதவிகளை கொண்ட இந்திய மல்யுத்த கூட்ட மைப்பு செயற்குழுத் தேர்தல் நடத்த வேண்டும் எனவும், இல்லை யெனில் உறுப்பினர் பதவி ரத்து செய்யப்படும் என கடிதம் மூலம் உலக மல்யுத்த கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்தது. ஆனால் 3 மாத காலம் ஆகியும் இதுவரை செயற்குழுத் தேர்தல் நடத்தப்படாததால் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீ காரத்தை ரத்து செய்தது உலக மல்யுத்த கூட்டமைப்பு. இந்த நடவடிக்கையால் இனி இந்திய மல்யுத்த வீரர் - வீராங்க னைகள் நாட்டின் பெயருடன் கள மிறங்க முடியாத சூழல்ஏற்பட்டுள்ளது.
மனைவி தொடுத்த வழக்கால் முகமது ஷமிக்கு சிக்கல்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜஹான். இவர் குடும்ப வன்முறை தொடர்பாக முகமது ஷமி மற்றும் அவரது சகோதரர் முகமது ஹசீப் மீது வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் முகமது ஷமி மனைவி ஹசின் ஜஹானுக்கு மாதம் ரூ.1.30 லட்சம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்து இருந்தது. இன்னும் வழக்கு விசாரணை முழுமையாக நிறைவு பெறாமல் உள்ள நிலையில், அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 30 அன்று தொடங்குகிறது. இதனால் 30 நாட்களுக்குள் ஷமி ஜாமீன் பெற வேண்டும் என கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதற்காக ஜாமீன் பெற வேண்டும் என்பதை நீதிமன்றம் விரிவாக கூறவில்லை. ஷமி ஆசியக் கோப்பை தொடரில் இடம்பெற்றுள்ள நிலை யில், இந்த வழக்கு அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை
நெருங்கும் ஆசிய, உலகக்கோப்பை கிரிக்கெட்
பயிற்சி திட்டங்களை அறிவித்த தேசிய அகாடமி
வரும் 31 அன்று தொடங்கும் 16-ஆவது ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான், இலங்கை நாட்டில் நடைபெறுகிறது. இந்தியா உட்பட மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய தேசிய கிரிக்கெட் அகாடமி புதிய பயிற்சி திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த பயிற்சி திட்டம் வரவிருக்கும் உலகக்கோப்பை தொடருக்கும் சார்ந்ததாக இருக்கும் என தேசிய கிரிக்கெட் அகாடமி வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. பயிற்சி விபரங்கள்: ஒவ்வொரு வீரரும் குறிப்பிட்ட அளவு புரதத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். ஜிம் ஒர்க் அவுட், நடைபயிற்சி,ஓட்டப்பயிற்சி, நீச்சல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். மூத்த வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மாவிற்கு 9 மணிநேர தூக்கத்துடன் யோகா பயிற்சிகள் கொடுக்கப் பட்டுள்ளன. உடல் இயக்கம், தோள்பட்டை, குளுட் தசைகள் ஆகிய வற்றில் முக்கியத்துவம் செலுத்தும் உடற்பயிற்சி முறைகள் வகுக்கப் பட்டுள்ளதாக தேசிய கிரிக்கெட் அகாடமி கூறியுள்ளது.