ரிஷப் பண்டும் சதம் லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் ரன்மழை பொழிந்த இந்தியா
5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் இங்கிலாந்து நாட்டின் லீட்ஸ் நகரில் உள்ள ஹெட்டிங்லி மைதானத்தில் வெள்ளிக்கிழமை அன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் களமிறங்கிய இந்திய அணி, இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை புரட்டியெடுத்தது. முதல் நாளில் ஜெய்ஸ்வால் (101), கேப்டன் சப்மன் கில் (147) சதமடித்த நிலையில், 2ஆவது நாளில் இந்திய துணை கேப்டன் ரிஷப் பண்ட் 146 பந்துகளில் அதிரடியாக விளையாடி சதமடித்து (100 ரன்கள்) அசத்தினார். இரண்டாம் நாளின் முதல் சீசன் தேனீர் இடைவேளையின் போது இந்திய அணி 106 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 450 ரன்கள் எடுத்திருந்தது. ரிஷப் பண்ட் (132), ஜடேஜா (1) ஆகியோர் களத்தில் இருந்தனர். (மாலை 5:30 மணி நிலவரம்)
கிளப் உலகக்கோப்பை கால்பந்து தென் அமெரிக்க கண்ட கிளப் அணிகள் அபாரம்
கிளப் உலகக்கோப்பை கால் பந்து தொடரின் 21ஆவது சீசன் அமெரிக்காவில் ஜூன் 14ஆம் தேதி தொடங்கியது. ஜூலை 13ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொட ரில் உலகம் முழுவதிலும் இருந்து 32 கிளப் அணிகள் பங்கேற்றுள்ளன. தற்போது இந்த தொடரில் லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கிளப் உல கக்கோப்பை கால்பந்து தொடரின் 9 லீக் ஆட்டங்கள் முடிவில் 15 கோல்களு டன் தென் அமெரிக்க கண்ட கிளப் அணிகள் (6 கிளப் அணிகள்) முத லிடத்தில் உள்ளன. மற்ற கண்ட கிளப் அணிகள் (26 கிளப் அணிகள்) அனைத் தும் சேர்த்தும் வெறும் 5 கோல்களு டன் மிக மோசமான நிலையில் உள்ளன. அதாவது தென் அமெரிக்க கண்ட கிளப் அணிகளே கோல் மழை பொழிந்து வருகின்றன. மற்ற கண்ட கிளப் அணிகள் திணறலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின் றன என்பது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் கேப்டனாக இந்திய வம்சாவளி
தென் ஆப்பிரிக்கா ஆடவர் கிரிக்கெட் அணி ஜூன் மாத கடைசியில் 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை யை வென்று கொடுத்த தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமாவுக்கு ஜிம்பாப்வே டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக கேஷவ் மஹாராஜ் அணியை வழிநடத்த உள்ளார். கேஷவ் மஹாராஜ் இந்திய வம்சாவளி ஆவார். ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 28ஆம் தேதி தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டிஎன்பிஎல் இன்றைய ஆட்டங்கள்
சேலம் - திண்டுக்கல் நேரம் : மதியம் 3:15 மணி
மதுரை - திருப்பூர் நேரம் : இரவு 7:15 மணி
இரண்டு ஆட்டங்களும் : இந்தியா சிமெண்ட்ஸ் மைதானம், திருநெல்வேலி